ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கறார் உத்தரவு
புதுதில்லி, அக். 20 - கழிவுகளை கையால் அக ற்றும் வெறுக்கத்தக்க நடைமுறை யை முற்றிலுமாக தடுத்து நிறுத்து மாறு, ஒன்றிய - மாநில அரசு களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும், கழிவுநீர் அகற்றும் பணியின்போது உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை குறைந்தது ரூ. 30 லட்சமாகவும், படுகாயமடைந்து நிரந்தர உடல் ஊனம் அடைவோ ருக்கு ரூ. 20 லட்சமாகவும் உயர்த்தி வழங்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப் பித்துள்ளது. இதர ஊனங்களுக்கு 10 லட் சத்துக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர். இந்தியாவில் தூய்மைத் தொழிலாளர்கள் மூலம் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை தொடர்ந்து வரு கிறது. பாதாளச் சாக்கடைகளில் இறங்கி தூய்மைத் தொழி லாளர்கள் பணியாற்றும் சம யங்களில் விஷ வாயு தாக்கி, அவர்கள் இறக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கின்றன. 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்களவையில் மேற் கோள் காட்டப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஐந்தாண்டு களில் இந்தியாவில் சாக்கடை கள் மற்றும் செப்டிக் டேங்கு களை சுத்தம் செய்யும் போது 347 பேர் இறந்துள்ளனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, கைகளால் மனிதக் கழிவை அள்ளு வதற்குத் தடைவிதித்தும், உலர் கழிப்பறைகளின் கட்டு மானத்துக்குத் தடைவிதித்தும் 1993-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் சட்டம் கொண்டுவரப் பட்டது. இதற்கு
இதற்கு அடுத்தபடியாக, 2013-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் மனிதக் கழிவை மனிதர் கை களால் அகற்றும் நிலை முழுவதுமாக தடுக்கப்பட வில்லை. இப்போது வரை இந்த அவலம் தொடர்ந்து வருகின்றது. எனினும் பாதிப்பைக் குறைக்கும் வகையில், சபாய் கரம்சாரி வழக்கின் 2014 தீர்ப்பின்படி, கையால் சுத்தம் செய்பவர்களுக்கு பண உதவி, அவர்களுக்கான வீடு, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வாழ்வாதாரத் திறன் பயிற்சி, நிதியுதவியளிக்க சலுகைக் கடன்கள், சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றெல்லாம் பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில், கைகளால் கழிவுகளை அகற்றும் பணியில் துப்புரவுத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதற்கு எதிராக டாக்டர் பல்ராம் சிங் தொடர்ந்த பொதுநல வழக்கை நீதிபதி எஸ். ரவீந்திர பட், அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, வெள்ளிக்கிழமையன்று விசாரித்தது.
அப்போதுதான், மனிதக் கழிவுகளை மனிதரே கையால் அகற்றும் நடைமுறை இந்தியா வில் இன்னும் தொடர்வதற்கு, தனது வேதனையை பதிவு செய்த உச்சநீதிமன்றம், உயிரிழப்புக்கு குறைந்தது ரூ. 30 லட்சம், நிரந்தர உடல் ஊனத்திற்கு ரூ. 20 லட்சம் என இழப்பீட்டை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாது, தூய்மைப் பணியாளர்களுக்கு வேறு ஏதேனும் குறைபாடுகள் மூலம் பாதிப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதி பதிகள் கூறியுள்ளனர். கழிவகற்றும் பணியில் மனி தர்களை நேரடியாக ஈடுபடுத்து வதை தடைசெய்தல் மற்றும் அவர்களுக்கான 2013-ஆம் ஆண்டின் மறுவாழ்வுச் சட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 14 வழிகாட்டுதல்களையும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. தங்களின் உத்தரவு மீதான ஒன்றிய - மாநில அரசுகளின் செய லாக்கம் குறித்து, 2024 பிப்ரவரி 1 அன்று கண்காணிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதி ரவீந்திர பட் அமர்வு தெரிவித்துள்ளது.