தேர்தல் அட்டவணை
குஜராத் தேர்தல் முதல் கட்டம் இரண்டாவது கட்டம்
89 தொகுதிகள் 93 தொகுதிகள்
மனு தாக்கல் ஆரம்பம் நவம்பர் 5 நவம்பர் 10
மனு தாக்கல் முடிவு நவம்பர் 14 நவம்பர் 17
வேட்பு மனு
பரிசீலனை நவம்பர் 15 நவம்பர் 18
வேட்பு மனு திரும்ப
பெறும் நாள் நவம்பர் 17 நவம்பர் 21
தேர்தல்
நடைபெறும் நாள் டிசம்பர் 1 டிசம்பர் 5
புதுதில்லி, நவ.3- குஜராத் சட்டப்பேரவைக்கு ஒருவழியாக தேர்தல் அறிவிக்கப் பட்டு உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் 2 கட் டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணை யர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். இமாசலப்பிரதேச சட்டப்பேர வையின் பதவிக் காலம் 2023 ஜன வரி 8-ஆம் தேதியுடனும், குஜராத் சட்டப்பேரவையின் பதவிக் காலம் 2023 பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, இந்த இரண்டு மாநிலங்களுக்கும் ஒருசேர தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், கடந்த அக்டோபர் 14 அன்று இமாசலப்பிரதேச சட்டப் பேரவைக்கு மட்டும் ‘நவம்பர் 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறும்’ என்று அறிவித்த இந்தியத் தலை மைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், குஜராத்திற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றார். “இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையும் தேதியில் இருந்து 40 நாட்கள் கழித்தே குஜராத் சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைவதால் இரு மாநில சட் டப்பேரவைத் தேர்தல்களையும் தனித்தனியே நடத்துவதில் விதிப் படி தவறில்லை” என்று அவர் விளக்கம் அளித்தார்.
ஆனால், பிரதமர் மோடியின் குஜராத் சுற்றுப்பயணத்திற்காக வும், இலவச சலுகைகள் அறி விப்பிற்குமாகவே தேர்தல் தேதி அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதற்கேற்பவே, அக்டோபர் 18 அன்று பிரதான் மந்திரி உஜ் வாலா யோஜனா திட்ட பயனாளி களுக்கு, ஆண்டுக்கு 2 சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற இலவச சலுகை அறிவிப்பை குஜ ராத் பாஜக அரசு வெளியிட்டது. அதுமட்டுமல்லாமல், சிஎன்ஜி மற் றும் பிஎன்ஜி எரிவாயு சிலிண்டர்கள் மீதான வாட் வரியையும் 10 சதவிகி தம் குறைத்தது.
அக்டோபர் 19 முதல் குஜராத் தில் காந்திநகர், ஜுகநாத், ராஜ் கோட், கேவடியா மற்றும் வியாரா உள்ளிட்ட பகுதிகளில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிர தமர் நரேந்திர மோடி, ரூ. 15 ஆயி ரத்து 670 கோடி மதிப்புள்ள நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி னார். குஜராத் மாநிலம் ஜம்பு கோதாவில் ரூ.860 கோடி மதிப்பி லான திட்டங்களையும் திறந்து வைத்தார். குஜராத் மாநிலத்தில், தென் மேற்கு பருவமழையின் போது, பாதிப்புக்கு உள்ளான 14 மாவட் டங்களைச் சேர்ந்த 8 லட்சம் விவ சாயிகளுக்கு அக்டோபர் 28 அன்று ரூ. 630 கோடியே 34 லட்சம் நிவா ரண நிதி அறிவிக்கப்பட்டது. விவ சாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 13 ஆயிரத்து 500, பட் ஜெட் ஒதுக்கீடு மூலம் ரூ. 16 ஆயி ரத்து 500 என ரூ. 30 ஆயிரம் விகிதம் 2 ஹெக்டேருக்கு இந்த இழப்பீடு அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 30 அன்று வதோத ராவில் இந்திய விமானப்படைக் கான சி-295 போக்குவரத்து விமா னங்களை தயாரிப்பதற்கான ரூ. 22 ஆயிரம் கோடி மதிப்பிலான டாடா - ஏர்பஸ் தனியார் ஆலைக்கு பிர தமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதற்கு முன்பு, செப்டம்பர் மாதத் தில் 19.5 பில்லியன் டாலர் முத லீட்டில் வேதாந்தா நிறுவனத்தின் செமி கண்டக்டர் தயாரிக்கும் தொழிற்சாலையும் குஜராத்திற்கு கொண்டு வரப்பட்டது. மகாராஷ்டி ராவிற்கு செல்லவிருந்த திட்டம் கடைசி நேரத்தில் குஜராத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு குஜராத் பாஜக அரசு, திட்டங்கள்- சலுகைகள் அனைத்தையும் அறிவித்து முடித்த பின்னணியில், குஜராத் சட்டப்பேர வைக்குத் தற்போது தேர்தல் அறி விக்கப்பட்டு உள்ளது.
முதல் கட்டமாக 89 தொகுதி களுக்கு டிசம்பர் 1-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 93 தொகுதி களுக்கு டிசம்பர் 5-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மேலும், “முதற்கட்ட தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 5-இல் துவங்கி நவம்பர் 14 வரை நடைபெறும், இரண்டாம் கட்ட தேர் தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 10-இல் துவங்கி நவம்பர் 17 வரை நடைபெறும்” என்று கூறி யுள்ள ராஜீவ் குமார், “182 தொகு திகள் கொண்ட குஜராத் சட்டப் பேரவை தேர்தலுக்காக மொத்தம் 51 ஆயிரத்து 782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன; 2 கோடியே 53 லட்சம் ஆண் வாக் காளர்களும், 2 கோடியே 37 லட்சம் பெண் வாக்காளர்கள் என மொத் தம் 4 கோடியே 90 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள னர்” என்றும் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தவரை, டிசம்பர் 8 ஆம் தேதி, இமாசலப் பிரதேச தேர்த லோடு சேர்த்தே குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற வுள்ளது.
ஆம் ஆத்மியை நம்பி களமிறங்கும் பாஜக
குஜராத்தில் தொடர்ந்து 5 தேர்தல்களில் வெற்றிபெற்று 24 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக ஆட்சியில் உள்ளது. 6-ஆவது முறையும் வெற்றிபெற்று விட வேண்டும் என்பதற் காக பகீரதப் பிரயத்தனங்களை அது செய்து வரு கிறது. 1995-இல் முதல்முறையாக குஜராத்தில் ஆட்சியை பிடித்தபோது, 121 இடங்களைப் பாஜக பெற்றது. 2002-இல் நரேந்திர மோடி தலைமை யேற்றபோது 127 இடங்கள் என்ற உச்சத்திற்குச் சென்றது. ஆனால், அதன்பிறகு மோடி முதல்வ ராக இருந்தபோதே 2007-இல் 117, 2012-இல் 115 என இடங்கள் குறைந்தது. இறுதியாக 2017 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தப்பிப் பிழைத்தது. 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்த லில் 182 இடங்களில் பெரும்பான்மைக்குத் தேவை 92 இடங்கள் என்ற நிலையில், அந்த இடங்க ளைக் காட்டிலும் 7 இடங்கள் அதிகமாகவே 99 இடங்களை பாஜக வென்றது.
என்றாலும் கடந்த தேர்தலை விட இது 16 இடங்கள் குறைவு. இந்தப் பெரும்பான்மையையும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே அது பெற்றது. காங்கிரஸ் 177 இடங்களில் போட்டியிட்டு, 77 இடங்களை கைப்பற்றியது. ஆதரவு சுயேட்சைகளையும் சேர்த்து காங்கிரஸ் 79 இடங்களைப் பிடித்தது. பாஜக 16 இடங்களை இழக்க, அந்த 16 இடங் களை காங்கிரஸ் கைப்பற்றியது. பட்டியல் வகுப்பி னருக்கு 13 தொகுதிகள், பழங்குடியினருக்கு 27 தொகுதிகள் என குஜராத்தில் மொத்தமுள்ள 40 தனித்தொகுதிகளில் பாஜக-வால் சாதிக்க முடியவில்லை. காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களைப் பிடித்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பின், வழக்கம்போல காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை தன்பக்கம் இழுத்து, பாஜக தனது எண்ணிக்கையை 99-இல் இருந்து 111 ஆக உயர்த்திக் கொண்டது. காங்கிரசின் பலம் 63 ஆக குறைக்கப்பட்டது. எனவே, 2022 தேர்தல் பாஜக-வை அச்சத்திலேயே வைத்துள்ளது. 2022 தேர்தலில் மூன்று இலக்கங்களில் அறுதிப் பெரும்பான்மை பெறவேண்டும், குறிப்பாக தனித்தொகுதிகளில் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்காகவே, ஏராளமான திட்டங்களை அறி வித்து- அதன்பிறகு தேர்தல் களத்திற்கு வந்துள் ளது. தேர்தல் ஆணையமும் பாஜக-வுக்காகவே காத்திருந்தது போல ‘நிதானமாக’ தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும், இந்த தேர்தலில் இலவச திட்டங்கள், அறிவிப்புகளைக் காட்டிலும் பாஜக உண்மையில் பெரிதும் நம்பியிருப்பது ஆத் ஆத்மி கட்சியை யும், அது பிரிக்கப் போகும் பாஜக எதிர்ப்பு வாக்கு களையும்தான் என்றால் அது மிகையாக இருக்காது.