states

குடியரசுத் தலைவருக்கு மட்டும் அழைப்பு இல்லை!

புதுதில்லி, மே 26 - தில்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளு மன்றக் கட்டடத்தை, மே 28 அன்று பிரதமர் திறந்து வைக்க உள்ளதாக ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ளது. இது, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு க்கு உள்ளாகி இருக்கிறது. 21 எதிர்க்கட்சிகள், இந்த திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவ தாக அறிவித்துள்ளன. இதில் 19 எதிர்க் கட்சிகள், திறப்பு விழாவை ஏன் புறக்கணிக் கிறோம் என்பதற்கான காரணத்தை அறிக்கையாகவும் கூட்டாக வெளியிட்டன. நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் மூலம் ஏன் திறக்க வில்லை... அல்லது குடியரசுத் தலை வரையே ஏன் அழைக்கவில்லை என்ற  எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு முறையாகப் பதில் அளிக்காத ஒன்றிய பாஜக, நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை, எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதாக வழக்கம்போல பழிபோட்டுள்ளது. தனது தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் இருக்கும் சிவசேனா (ஷிண்டே பிரிவு), தேசிய மக்கள் கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி, அப்னா தள் (சோனேலால்),

இந்திய  குடியரசுக் கட்சி (அத்வாலே), தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக (பழனிசாமி), அகில ஜார்கண்ட் மாணவர் சங்கம், மிசோ தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகளை, திறப்பு விழாவிற்கு வருமாறு கெஞ்சிக் கூத்தாடி கேட்டுக் கொண்டுள்ளது. கூட்ட ணிக்கு வெளியில் இருக்கும், சிரோமணி அகாலி தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும், எதிர்க்கட்சி வரிசை யில் இருக்கும் மதச்சார்பற்ற ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியனவும் திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில்தான், திறப்பு விழா வுக்கான அழைப்பிதழ்களை ஒன்றிய அரசு அனுப்பியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முன்னாள் சபா நாயகர்கள் துவங்கி, முன்னாள் பிரதமர்கள், இரு அவைகளின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், இந்திய அரசின் அனைத்துத்துறை அமைச்ச கங்களின் செயலாளர்கள், தொழிலதிபர் ரத்தன் டாடா, நாடாளுமன்றக் கட்டடத்தை வடிவமைத்த டாடா குழுமத்தின் தலைமை கட்டட வடிவமைப்பாளர் பிமல் படேல், நாட்டின் பிரபலமான சினிமா நட்சத்தி ரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்களை அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இந்த நாட்டின் முதல் குடி மகளும், நாடாளுமன்றத்தின் தலைவரு மான குடியரசுத் தலைவருக்கு அழைப்பி தழ் அனுப்பவில்லை.