ஜம்மு-காஷ்மீர், ஏப்.26- பிரதமர் மோடி வருகையால் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று சிபிஎம் தலைவர் முகமது யூசுப் தாரிகாமி விமர்சித்துள்ளார். 370-ஆவது சட்டப்பிரிவை அமல்படுத்தி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேச மாக துண்டாடிய பிரதமர் மோடி ஏப்.24-ஆம் தேதி முதன் முறையாக ஜம்மு-காஷ்மீருக்கு சென்றார். அப்போது இளைஞர்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்றும். உங்கள் தாத்தா- பாட்டியின் கனவை நிறைவேற்றுவேன் என்றும் அனைவரும் இப்போது ஜம்மு-காஷ்மீரில் அச்சமின்றி வாழ்வதாகவும் பேசியிருந்தார். இவரது வருகை மற்றும், உரை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் ஜனநா யகக் கட்சி ஆகியவை விமர்சித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது யூசுப் தாரிகாமி கூறியிருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மோடி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இவரது உரையால் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியடையவில்லை. இளைஞர் களின் வேலை, கல்வி மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு குறித்து பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. காஷ்மீரில் இளைஞர்கள் பாதுகாப்பாக இல்லை. உண்மையைக் கூறுவதென்றால், பிரதமரின் வருகைக்கு முன்னால் பலர் காவல் நிலையங்களில் அடைக்கப்பட்டிருந்தனர். வகுப்பு வாதம் குறித்தோ, கூட்டாட்சித் தத்துவத்தின் மீது நடைபெறும் தாக்குதல் குறித்தோ மோடி பேசவில்லை. மக்களின் அபிலாஷைகள் மற்றும் கஷ்டங்கள் குறித்து ஒன்றிய அரசு கவலைப்பட வில்லை என்பதையே பிரதமரின் பயணம் நிரூபித்துள்ளது.
சம்பா முதல் ஜம்மு வரையிலான தொழில்துறைப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் வெளியாட்களுக்குச் சொந்த மானவை. தற்போது காஷ்மீரில் பல உண வகங்கள் வெளி மாநிலத்தவரால் நடத்தப்படு கிறது என்றார்.
இருளடைந்து கிடக்கும் காஷ்மீர்
முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி கூறியிருப்ப தாவது:- பிரதமர் மோடியின் வருகையை நான் எதிர்பார்க்கவில்லை. இளைஞர்களின் எதிர்காலம் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இளைஞர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (PSA) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டங்களின் கீழ் சிறையிலடைக்கப்படுகின்றனர். இது அவர்களின் தாத்தா பாட்டி மற்றும் பெற்றோர்கள் யாரும் பார்க்காதது, கண்டிராதது. வேலைகள் வெளியாட்களுக்கு வழங்கப்படு வதால் உள்ளூர் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றித் தவிக்கின்றனர். ஜம்மு-காஷ்மீரில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், வீடுகள் வேறு இடங்களில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஜம்மு- காஷ்மீர் தொடர்ந்து இருட்டிற்குள் தள்ளப்படு கிறது. ரமலான், இப்தார் காலங்களில் மின்வெட்டு கடுமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.