அலகாபாத், மே 30 - செங்கோலுக்கு, ‘வாக்கிங் ஸ்டிக்’ எனப் பெய ரிடப்பட்டு இருந்ததாகவும், நேருவின் ஆனந்த பவனில் கவனிப்பாரற்றுக் கிடந்த ஆதீனங் களின் செங்கோலை தற்போது மீட்டெடுத்து ள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று, அலகாபாத் அருங்காட்சியகத்தின் ஓய்வுபெற்ற இயக்குநர் டாக்டர் ஒங்கர் ஆனந்த் ராவ் வான்கடே அம்பலப்படுத்தியுள்ளார். “புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல், முன்பு அலகாபாத்தில் உள்ள ஆனந்த பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’ போல் வைக்கப் பட்டிருந்தது; அதற்கு இன்றுதான் விமோசனம் கிடைத்துள்ளது” என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். 1947-ஆம் ஆண்டு பிரதமர் பதவி ஏற்பதற்கு முதல் நாள் மரியாதை நிமித்தமாக நேருவைச் சந்தித்த திருவாவடுதுறை ஆதீனம், நேருவிடம் வெள்ளியிலான தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோலை வழங்கினார். அது அலகாபாத் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இதனைக் குறிப்பிட்டுத்தான் பிரதமர் மோடி, “செங்கோலுக்கு உரிய மரியாதையை நாட்டின் முதல் பிரதமரான நேரு வழங்க வில்லை; காங்கிரஸ் கட்சியினரோ செங்கோ லை, நேருவின் ‘வாக்கிங் ஸ்டிக்’ போல மாற்றி னர். ஆனால், தற்போது அதன் புனிதத்தை நான் மீட்டெடுத்துள்ளேன்” என்று கதை யளந்திருந்தார். ஆனால், பிரதமர் மோடி பேச்சு முழுவதும் பொய் என்று ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலை வர்கள் பலரும் பதிலடி கொடுத்திருந்தனர். இந்நிலையில், ‘செங்கோல்’ காட்சிப்படுத்தப் பட்டு இருந்த அலகாபாத் அருங்காட்சியகத்தின் காப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் ஒங்கர் ஆனந்த் ராவ் வான்கடே-வும், பிரதமர் மோடி மற்றும் பாஜக-வினரின் பொய்யைப் புட்டுப் புட்டு வைத்துள்ளார். இதுதொடர்பாக, டாக்டர் ஒங்கர் ஆனந்த் ராவ் வான்கடே ‘தி வயர்’ நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலகாபாத் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த செங்கோலானது, ‘பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு பரிசளிக்கப் பட்ட தங்கக் குச்சி’ (‘Golden Stick’) என்ற தலைப்பில் மிக எளிமையாக பதிவு செய்யப் பட்டிருந்தது. பாஜக கூறுவது போல் ‘வாக்கிங் ஸ்டிக்’ (‘Walking Stick’) என்பது போன்றெல்லாம் குறிப்பிடப்படவில்லை. சொல்லப்போனால், ‘ஜவஹர்லால் நேரு’ என்ற வார்த்தைகள் கூட விளக்கத்தில் குறிப்பிடப் படவில்லை” என்று தெரிவித்துள்ளார். “1948 முதல் 1952-ஆம் ஆண்டு வரை அலகா பாத் அருங்காட்சியகத்திற்கு வந்த பொருட் களை கையாண்டவர் அந்த அருங்காட்சி யகத்தின் முதல் காப்பாளரும் பின்னாளில் அருங் காட்சியக இயக்குநராகவும் இருந்தவர், எஸ்.சி. கலா ஆவார். அவர், செங்கோலை, ‘தங்கக் குச்சி’ என பதிவேடு தயாரித்தார். அதுவே அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் இருந்த பெயராகும். ஒரு காப்பாளரின் கடமை தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளை வகைப் படுத்தி அதற்கு பெயரிட்டு அருங்காட்சியகத் தில் பாதுகாப்பாக வைப்பது மட்டுமே ஆகும். இது யாருடையது..? யாரால் செய்யப்பட்டது..
? எப்போது செய்யப்பட்டது..? என்பன உள்ளிட்ட தகவல்களை சேகரிப்பது வரலாற்று ஆய்வா ளர்களின் கடமையே தவிர, அது அருங்காட்சி யக காப்பாளரின் கடமையாகாது. அதுபோல வே, எஸ்.சி. கலாவும் நேருவுக்கு வழங்கப்பட்ட இந்த பரிசுப் பொருளுக்கு ‘பண்டித ஜவஹர் லால் நேருவுக்கு பரிசாக வழங்கப்பட்ட தங்கக் குச்சி’ என்று பெயரிட்டு பாதுகாத்தார். ஆனால், இதற்கு ‘வாக்கிங் ஸ்டிக்’ என்று பெயரிட்டு, அதில்- நேருவின் பெயர் கூட குறிப்பிடப்பட வில்லை என்று பாஜக-வினர் கூறுவது அப்பட்ட மான பொய். மேலும், இந்த செங்கோல், அவர்கள் (பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர்) கூறுவது போல் ஆனந்த பவனில் (நேரு - காந்தி குடும் பத்தின் இல்லம்) வைக்கப்படவில்லை. இது அலகாபாத் அருங்காட்சியகத்தில்தான் வைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்துதான், இந்த செங்கோல், உ.பி. மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலின் ஒப்புதலுடன், தில்லி தேசிய அருங் காட்சியகத்திற்கு 2022 நவம்பர் 4-ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் கொண்டு செல்லப்பட்டது. ஆனந்த பவனிலிருந்துஅல்ல. இங்கே குறிப்பிட வேண்டியது, பிரதமராக பதவியேற்பதற்கு முன்பே, தனக்கு வழங்கப் பட்ட பரிசுப் பொருட்களை மட்டுமன்றி தனக்குச் சொந்தமான ஆனந்த பவன் இல்லத்தையும் நேரு நாட்டுக்காக வழங்கிவிட்டார் என்பது தான். அது தனி வரலாறு. எனவே, செங் கோல், நேருவின் ஆனந்த பவனில் வைக்கப்பட வில்லை. அருங்காட்சியகத்தில்தான் வைக்கப்பட்டிருந்ததை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு டாக்டர் ஒங்கர் ஆனந்த் ராவ் வான்கடே தெரிவித்துள்ளார்.