states

img

பெண்மருத்துவர் கொலை அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது: முதல்வர்

இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கத்தியால் குத்தி கொல்லப் பட்ட சம்பவம் அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக  அழைத்து வரப்பட்டவர் மருத்துவரை தாக்கியுள்ளார். வன்முறையைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரிகளும் மற்றவர்களும் கத்தியால் குத்தப்பட்டனர். பணியின் போது சுகாதார ஊழியர்களை தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். உயிரிழந்த மருத்துவர் வந்தனா தாஸின் குடும்பத்தினருக்கு மருத்துவமனை சென்று ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. சக ஊழியர்களின் துயரங்களைப் பகிர்ந்து கொள்வதாகவும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.