states

img

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20-இல் துவங்குகிறது!

புதுதில்லி, ஜூலை 1- நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத் தொடர் ஜூலை 20 அன்று துவங்க வுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்  சர் பிரகலாத் ஜோஷி அறி வித்துள்ளார். “2023-ஆம் ஆண்டிற் கான மழைக்காலக் கூட்டத் தொடர், ஜூலை 20 அன்று  தொடங்கி, ஆகஸ்ட் 11 வரை  17 நாட்களுக்கு நடைபெறு கிறது. இந்தக் கூட்டத் தொட ரின்போது கொண்டுவரப்பட உள்ள சட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் ஆக்கப்பூர்வ பங்களிப்பை அளிக்க வேண்டும் என வலி யுறுத்துகிறேன்” என பிரக லாத் ஜோஷி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மழைக்காலக் கூட்டத் தொடரானது, பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆரம்பித்து, பின்னர், பிரதமர் மோடியால் கடந்த மே 28 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்ட டத்திற்கு மாற்றப்படும் என்று  தகவல்கள் தெரிவிக்கின் றன. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் இனக் கலவரம், பொது சிவில் சட்டம், விலை வாசி உயர்வு, ராகுல் காந்தி யின் எம்.பி. பதவி பறிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மறுபுறத்தில், தில்லி அரசின் சேவை அதி காரத்தைப் பறிக்கும் வகை யில், பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டத்திற்கு மாற்  றான நிரந்தர சட்ட மசோதா, தேசிய ஆராய்ச்சி அறக்கட்  டளை மசோதா, தேசிய நிதித்  தகவல் பதிவேடு, டிஜிட்டல்  தனிநபர் தரவுப் பாதுகாப்பு  மசோதா மற்றும் திவால் திருத்தச் சட்டம் உள்ளிட்ட வற்றை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற  ஒன்றிய அரசு திட்டமிட்டுள் ளது. 2024 மக்களவைத் தேர்த லில், பாஜகவுக்கு எதிராக  ஒருங்கிணைந்து செயல்படு வதென, 17 எதிர்க்கட்சிகள் பாட்னாவில் கூடி முடிவெ டுத்துள்ள நிலையில், மழைக்காலக் கூட்டத் தொட ரில், நிச்சயமாக பாஜக வுக்கு எதிராக விவாதங்கள் அனல் பறக்கும் என்று கூற லாம்.