states

img

பகத்சிங், நேதாஜியோடு.. சாவர்க்கரை இணைப்பது மோசடி!

திரிணாமுல் எம்.பி. மஹூவா மொய்த்ரா அதிரடி

புதுதில்லி, பிப். 4 - நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் வெப்பம் தணிவதற்குள், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ராவும், தன் பங்கிற்கு மதவெறி அரசியலை கடு மையாக தாக்கி, பாஜக-வினரை கலங் கடித்துள்ளார். அவர் மக்களவையில் பேசியிருப்பதாவது: “இந்த அரசு, நிகழ்காலத்தை நம்ப வில்லை. அது தங்களின் எதிர்காலத் தை நினைத்துப் பயப்படுகிறது. இந்தி யாவின் கடந்த கால கண்ணியம், பன்மைத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை இந்த அரசாங்கத்தை அச்சுறுத்துகிறது.

அதற்காக, வர லாற்றைத் திரிக்கிறது. பிரிட்டிஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றுகிறது. பாசி சத்தை கடுமையாக எதிர்த்த பகத் சிங்கையும், தான், உள்துறை அமைச்ச ரான பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்த வல்லபாய் படேலையும் தனது கையிலெடுத்து, அவர்கள் கொள்கைகளின் வரலாறுகளை மாற்றுகிறது. இந்திய அரசாங்கம் அனைத்து மதத்தினரிடமும் நடுநிலையும் பாரபட்சமற்ற அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறி யவர்தான் நேதாஜி. மேலும், பாடப் புத்தகங்களில் இருந்து எவரின் வர லாற்றை இந்த அரசு அழித்ததோ, அந்த  திப்பு சுல்தானின் புலி சின்னத்தைத் தான் நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவத்தின் (INA) சின்னமாக வைத்திருந்தார். நேதாஜி இன்று இருந்திருந்தால் முஸ்லிம் இனப்படு கொலைக்கு அழைப்பு விடுத்த ஹரித்துவார் ‘தரம் சன்சத்’தை வேடி க்கை பார்த்துக் கொண்டிருப்பாரா என்ன?

நேதாஜி உருவாக்கிய ஐஎன்ஏ-வின் பொன்மொழிகள் மூன்றும் உருது வார்த்தைகள்: எதிஹாத், எட்மாட் மற்றும் குர்பானி. இதன் அர்த்தம்... ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் தியாகம். ஆனால், அந்த உருது மொழியை மாற்றி ஜம்மு - காஷ்மீரின் முதல் மற்றும் அதிகாரப்பூர்வ மொழி யாக இந்தியை கொண்டுவர இந்த அரசு முயல்கிறது. இந்த நாட்டிற்கு மாற்றம் தேவையா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு, மக்களாகிய எங்களிடமே உள்ளது. அதை நீங்கள் (ஆட்சி யாளர்கள்) தேர்வு செய்ய முடியாது. தனது சொந்த குடிமக்களை உளவு பார்ப்பதற்கான தொழில் நுட்பத்தை வாங்குவதற்கு- அவர்கள் செலுத்தும் வரிப் பணத்தையே செல வழித்த ஒரே அரசு இதுதான். வேளாண் சட்டங்களைக் கொண்டுவர வேண்டாம் என்று உங்களிடம் பல முறை கூறிய எங்களின் விவசாயி களை நீங்கள் நம்பவில்லை.

இப்போது அவற்றை நீங்கள் திரும்பப்  பெற்றாலும், மேற்கு உ.பி.-யில் 70 இடங்களை இழக்க நேரிடும் என்ற உங்கள் பயம் போகவில்லை. 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் இறப்புக்காக நீங்கள் உணர்ந்த வருத்தத்தை விட தோல்விபயமே உங்களுக்கு அதிகம். உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 142-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் அர்த்தம் இன்று பத்திரிகையாளர் களுக்கு உலகளவில் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது என்பதே ஆகும். இவ்வாறு மஹூவா மொய்த்ரா பேசியுள்ளார். “இன்று மாலை நான் மக்கள வையில் குடியரசுத் தலைவர் உரை  மீதான தீர்மானத்தின் போது பேசு கிறேன். பாஜக-வினரே, கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் உங் களுடைய தாக்குதல் படையைத் தயா ராக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் கோமியம் குடித்து விட்டு தயாராக இருங்கள்” என்று டுவிட்டரில் பதிவிட்டு, காலையிலே யே பாஜக-வினரின் ரத்த ஓட்டத்தை மஹூவா மொய்த்ரா அதிகரிக்கச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.