states

டிச.13-16 விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாடு

புதுதில்லி, டிச. 9- அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35ஆவது அகில இந்திய மாநாட்டிற்கான தியாகச்சுடர்களின் பயணம் தொடர்கிறது. டிசம்பர் 10  சனியன்று(இன்று) சேலத்தில் சங்க மித்து கேரளத்தில் நுழைய உள்ளன. அகில இந்திய விவசாயிகள் சங்க த்தின் இணைச் செயலாளர் விஜு கிருஷ்ணன் தலைமையில் தமி ழகத்தின் கீழவெண்மணியிலிருந்தும், தெலுங்கானாவில் இருந்து அகில இந்திய பொருளாளர் பி.கிருஷ்ண பிரசாத் தலைமையிலும் கொண்டு வரப்படும் தியாகச் சுடர்களின் பயணம் தமிழ்நாட்டின் சேலத்தில் 10  ஆம் தேதி சங்கமிக்கின்றன. தொடரும் தியாகச்சுடர்களின் பயணம் அன்றைய தினம் கேரளத்தின் பாலக் காடில் நுழைய உள்ளன. 12ஆம்  தேதி மாலை 4 மணிக்கு திருச்சூரில் உள்ள சாக்தன் நகரை தியாகச்சுடர் கள் அடைகின்றன. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35ஆவது அகில இந்திய மாநாடு திருச்சூரில் டிசம்பர் 13 முதல் 16 வரை நடைபெறுகிறது. பிரதிநிதி கள் மாநாடு வரும் 13ஆம் தேதி கே. வரதராசன் நகரில் தொடங்குகிறது. 16ஆம் தேதி மாலை தேக்கின்காடு மைதானத்தில் உள்ள கோடியேரி பாலகிருஷ்ணன் நகரில் ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முதல்வர் பின ராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.