திருவனந்தபுரம், மே 9- நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு நீர் போக்குவரத்து சட்டத்திற்கு மாநிலத்தில் சிறப்பு விதிகள் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. புதிய விதிகள் மற்றும் பல்வேறு ஆணையங்களின் பரிந்துரைகள் சட்டத்தில் சேர்க்கப்படும். கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி கேரளாவை உலுக்கிய தேக்கடி படகு விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு பெரிய படகு விபத்து தானூரில் தற்போது நடந்துள்ளது. இதுபோன்ற விபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்த ஆலோசனைகளை ஒன்றிணைக்க மாநில அரசு வெவ்வேறு கட்டங்களில் மூன்று ஆணையங்களை அமைத்தது. 2002 ஜூலை 27இல் நடந்த குமரகம் விபத்து வழக்கில் நீதிபதி நாராயண குருப்பு கமிஷனும், பிப்ரவரி 20, 2007இல் தட்டேக்காட்டில் நடந்த விபத்து வழக்கில் நீதிபதி பரிதுப்பிள்ளை ஆணையமும், நீதிபதி மொய்தீன் குஞ்சு ஆணையமும் அமைக்கப் பட்டன. செப்டம்பர் 30, 2009 அன்று நடந்த விபத்து. ஆகியவற்றில் ஆணையங்கள் முன்வைத்த பல்வேறு பரிந்துரைகளின் அடிப்படையில், பாதுகாப்பை உறுதி செய் வதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளி யிட்டது. படகுகளின் ஆயுளுக்கு மேல் பயன்படுத்தி யதும் அனுமதிக்கப்பட்டதை விட அதிக மான ஆட்களை ஏற்றிச் செல்வதுமே விபத்துக் கான முக்கியக் காரணங்களாக ஆணை யங்கள் சுட்டிக்காட்டின. பாதையை தவறாகக் குறிப்பதும், ஆழம் மற்றும் அகலத்தை பராமரிக்காமல் இருப்பதும் ஆபத்தை அதிகரிக்கும். படகு பணியாளர்கள் மற்றும் பயணிகளின் கவனக்குறைவு, பணியாளர்கள் பயணிகளை கட்டுப்படுத்தாமை, பழுதடைந்த கட்டுமானம், உரிமம் வழங்கும் முறையின் குறைபாடு, படகில் ஏற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை ஆணை யங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.