states

அதானி சகோதரர்களின் அதிர்ச்சியூட்டும் மோசடிகள்

புதுதில்லி, பிப்.18- கவுதம் அதானியின் அதானி குழும மும், அவரது சகோதரர் வினோத் அதானி  வெளிநாடுகளில் நடத்தி வரும் போலி நிறு வனங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு டையவை; கவுதம் அதானியின் வெளி நாட்டு முகமாக வினோத் அதானி திகழ்கி றார்; இந்தியாவின் வணிகச் சட்டங்களிலி ருந்தும், வரி நடைமுறைகளிலிருந்தும் தப்பிப்பதற்காகவும், பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் மதிப்பை குறுக்கு வழியில் அதிகரிப்பதற்காகவும், சகோதரர் இருவரும் பரஸ்பரம் உரு வாக்கிக் கொண்டதே இந்த ஏற்பாடு என்று ‘போர்ப்ஸ்’ ஏடு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வினோத் அதானி மற்றும் கவுதம் அதானி சகோதரர்கள் செய்துள்ள மோசடிகள் தொடர்பாக புதிய விவ ரங்களையும் தனது அறிக்கையில் விரி வாக குறிப்பிட்டுள்ளது. இது ஏற்கெனவே  வெளியான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்  கைக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது. “வினோத் அதானி எந்த அதானி குழு மத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்க ளிலோ அல்லது அவற்றின் துணை நிறு வனங்களிலோ நிர்வாகப் பதவியை வகிக்கவில்லை மற்றும் குழுமத்தின் அன்றாட விவகாரங்களில் எந்தப் பங்கும் அவருக்கு இல்லை” என்று ஹிண்டன்பர்க்  நிறுவனத்திற்கு அளித்த 413 பக்க பதில்  கடிதத்தில் அதானி குழுமம் குறிப்பிட்டி ருந்தது.

ஆனால், அது உண்மையல்ல என் பதை ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனமே ஜனவரி 29 அன்று தனது 2-ஆவது அறிக்  கையில் விரிவாக விளக்கியது. அதானி  குழுமம் மற்றும் வினோத் அதானி  தொடர்புடைய அனைத்து பரிவர்த்தனை களையும் அடையாளம் கண்டு அம்ப லப்படுத்தியது. இந்நிலையில், ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’  அதானி குழுமம் தொடர்பான ஆய்வ றிக்கையில் முன்வைத்த குற்றச்சாட்டுக் களுக்கு மேலும் வலுசேர்ப்பதாகவும், ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஆய்வறிக்கையின் நம்பகத்தன்மையை மேலும் உறுதிப் படுத்துவதாகவும் போர்ப்ஸ் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வினோத் அதானி தொடர்பு டைய வெளிநாட்டு ஷெல் நிறுவனங்க ளும், கவுதம் அதானி தலைமையிலான அதானி குழும நிறுவனங்களும் தனித்தனி யானவை அல்ல; ஒன்றுக்கொன்று தொடர்பு டையவை. பங்குச் சந்தையில் பட்டியலி டப்பட்ட ஒரு நிறுவனம் பொதுச்சந்தையில்  குறைந்தபட்சம் 25 சதவிகித பங்குகளை உள்நாட்டினர் அல்லாதவர்களிடம் வைத்  திருக்க வேண்டும் என்ற இந்தியச் சட்டங்களிலிருந்து தப்பிப்பதற்காகவும், வேறுபல நிதி ஆதாயங்களுக்காகவும் முறைகேடான வகையில் ஏற்படுத்தப்பட்டவை என்பதை ‘போர்ப்ஸ்’ உறுதிப்படுத்தியுள்ளது.

அதானி குழுமத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்கள் வினோத் அதானி மேற்பார்வையில் இயங்கி வரு கின்றன. துபாய், சிங்கப்பூர், இந்தோனே சியா ஆகிய நாடுகளிலிருந்து அதானி குழு மத்துடன் தொடர்புடைய பிற நிறுவனங்க ளின் சர்வதேச வணிகத்தை வினோத் அதானி கவனித்து வருகிறார் என்பதுதான் உண்மை என்று ‘போர்ப்ஸ்’ கண்டறிந்துள்ளது. வினோத் அதானியின் மறைமுக கட்டுப்  பாட்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த வணிகம் மற்றும் முதலீட்டு நிறுவனமான ‘பினாக்கிள்’ (Pinnacle Trade and Investment Pte.  Lte) செயல்பட்டு வருகிறது. இந்த நிறு வனத்தின் பெயரில் கடந்த 2020-ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த விடிபி வங்கியில் (VTB Bank) வினோத் அதானி கடன் பெற்றுள்  ளார். இந்தக் கடனுக்கு உக்ரைன் - ரஷ்யா  போரின்போது 2021- ஏப்ரலில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரஷ்யாவின்  விடிபி வங்கியிடமிருந்து ‘பினாக்கிள்’ நிறு வனம் கடனாகப் பெற்ற 263 மில்லியன் டாலர்  களில் 258 மில்லியன் டாலர்கள் பெயரி டப்படாத பங்குகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது என்று ‘போர்ப்ஸ்’ அறிக்கை தெரி விக்கிறது. 

இது ஒருபுறமிருக்க, ரஷ்ய வங்கியிலி ருந்து பெற்ற கடன் தொகைக்கான உத்தர வாதமாக ‘ஆப்ரோ ஏசியா (Afro Asia) மற்றும் வேர்ல்ட்வைட்’ (Worldwide) ஆகிய இரு நிறுவனங்களை ‘பினாக்கிள்’ குறிப்  பிட்டுள்ளது. ஆனால், இந்த இரு நிறு வனங்களும் அதானி குழும பங்குதாரர் களுக்குச் சொந்தமானவை ஆகும். ஆப்ரோ ஏசியா டிரேட் மற்றும் வேர்ல்டுவைட் ஆகிய  இரண்டும் அதானி குழுமத்தின் பெரிய பங்கு தாரர்கள். பிப்ரவரி 16 சந்தை மதிப்பின்படி அதானி எண்டர்பிரைசஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி போர்ட்ஸ் மற்றும்  அதானி பவர் ஆகியவற்றில் 4 பில்லி யன் டாலர் மதிப்பிலான பங்குகளை கொண்டி ருக்கின்றன என்று போர்ப்ஸ் கண்டறிந் துள்ளது. அதாவது, அதானி நிறுவனப் பங்கு களின் மதிப்பின் அடிப்படையில், வினோத் அதானியின் ‘பினாக்கிள்’ நிறுவன கடன் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்துக்கான முதலீடுகளை, வினோத் அதானியின் வெளி நாட்டு நிறுவனங்கள் மூலம் பெற்று, கவுதம்  அதானி பங்குச் சந்தையில் தனது பங்கு களின் மதிப்பை உயர்த்திக் கொண்டது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதேபோல, சைப்ரஸில் உள்ள கார்ப்பரேட் பதிவுகளின்படி, 2012 ஆம் ஆண்  டுக்கு முந்தைய பரிவர்த்தனை ஒன்றில், வினோத் அதானிக்கு சொந்தமான ‘வகோ டர் இன்வெஸ்ட்மென்ட்’ என்ற சைப்ரஸ் நிறுவனம், துபாயில் உள்ள ஒரு கடல் நிறு வனத்திடம் இருந்து 232 மில்லியன் டாலரைக்  கடனாகப் பெறுகிறது. இவ்வாறு பெற்ற கட னிலிருந்து 220 மில்லியன் டாலரை எடுத்து  கவுதம் அதானிக்குச் சொந்தமான ‘அதானி  இன்ப்ராஸ்ட்ரக்சர் மற்றும் டெவலப்பர் ஸின்’ துணை நிறுவனங்களான ‘அதானி  எஸ்டேட்ஸ்’ மற்றும் ‘அதானி லேண்ட் டெவ லப்பர்ஸ்’ ஆகியவற்றில் வினோத் அதானி யின் ‘வகோடர் இன்வெஸ்ட்மென்ட்’ முதலீடு செய்துள்ளது. இந்த கடன் பத்திரங்கள் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இப்போ தும் அவற்றை வினோத் அதானியே வைத்தி ருக்கக் கூடும் என்று போர்ப்ஸ் தெரி விக்கிறது.

மேலும், 2012-ஆம் ஆண்டு வரை, அதானி  இன்ப்ராஸ்ட்ரக்சர் மற்றும் டெவலப்பர்கள், அதானி நிறுவனங்களின் துணை நிறு வனமாக இருந்தது. ஆனால், அதானி எண்டர்  பிரைசஸின் 2013-ஆம் ஆண்டு அறிக்கை யின்படி 81.5 மில்லியன் டாலர் லாபத்தை ஈட்டிய பின்னணியில், அதானி இன்ப்ராஸ்ட்ரக்சர் மற்றும் டெவலப்பர்கள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அதானி இன்ப்ராஸ்ட்ரக்சர் மற்றும் டெவலப்பர்கள், அதானி குழும நிறு வனங்களின் துணை நிறுவனமாக இருந்தது,  நான்காண்டுகளுக்குப் பின், அதானி நிறு வனத்தின் தொடர்புடைய நிறுவனமாக காட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு அதானி இன்ப்ராஸ்ட்ரக்சர் மற்றும் டெவலப்பர்கள், 2012-ஆம் ஆண்டு  விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்  பட்ட போதிலும், 2017 ஆம் ஆண்டுக்குள்  அதானி குடும்பம் அதானி இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் மற்றும் டெவலப்பர்களை, ‘எஸ்பி  அதானி பேமிலி டிரஸ்ட்; கௌதமின் மகன்,  கரண் அதானி மற்றும் அதானி எண்டர்பி ரைசஸின் துணை நிறுவனமான அதானி கமாடிடிஸ் எல்எல்பி’ ஆகிய மூன்று பங்குதாரர்களுக்குச் சொந்தமான ‘அதானி  ப்ராப்பர்டீஸ்’ என்ற மற்றொரு நிறுவனத்தின்  மூலம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தி ருப்பதையும் போர்ப்ஸ் கண்டறிந்துள்ளது. சுவிஸ் நிறுவனமான ஹோல்சிமின் இந்திய சிமெண்ட் நிறுவனங்களான அம்புஜா  சிமெண்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஏசிசி லிமிடெட் ஆகியவற்றின் பங்குகளை 10.5 பில்லியன் டாலருக்கு அதானி குழுமம் கடந்த ஆண்டு கையகப்படுத்தியது. இந்த ஒப்பந்தம் அதானி குழுமத்தை இந்தியாவின் இரண்டா வது பெரிய சிமெண்ட் நிறுவனமாக மாற்றி யது. இதிலும், வினோத் அதானியின் ‘வேர்ல்டுவைட் எமர்ஜிங் மார்க்கெட் ஹோல்டிங் லிமிடெட்’ மற்றும் ‘எண்டெவர் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமி டெட்’ பங்குகளை வைத்துள்ளது என்று போர்ஸ் கண்டறிந்துள்ளது.