அண்மைக் காலமாக அதிகரித்த ரப்பர் விலை, மீண்டும் கடுமை யாகச் சரிந்தது. ஆகஸ்ட் மாதத்தில் கிலோ ரூ.250 க்கு மேல் கிடைத்து வந்த விலை தற்போது ரூ.180 ஆக சரிந்துள்ளது. கன்டெய்னர்கள் தட்டுப்பாட்டால் குறைந்திருந்த சர்வதேச இறக்குமதி தற்போது வலுப்பெற்றி ருப்பதும் விலை குறைவதற்கு ஒரு காரணம் ஆகும். இதற்கிடையில் டயர் நிறுவனங்கள் உள்நாட்டு சந்தையில் ரப்பர் வாங்கு வதைத் தவிர்த்தது, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. ரப்பர் துறையின் புதிய எழுச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் விலை ரூ.250ஐ தாண்டி ரூ.253 ரூபாய் வரை சென்றது. 10 நாட்களில் 10 ரூபாய் குறைந்து 237 ரூபாயாக இருந்தது. செப்டம்பரில் சராசரி விலை ரூ.224 ஆக இருந்தது. ஆனால் அக்டோபர் 16ஆம் தேதி ரூ.200க்கு கீழே சரிந்தது. பின்னர் அது வேகமாக குறைந்து ரூ.180 ஆக வீழ்ச்சி அடைந்தது. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நல்ல விலை கிடைத்தாலும் விவசாயிகளுக்கு இதன் பலன் கிடைக்கவில்லை. மழை பெய்ததால் தண்ணீர் தேங்கி பால் வடிப்பு நடைபெறாததே இதற்கு காரணம். மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் உற்பத்தி குறைந்ததும் இந்தியாவில் ரப்பர் விலை உயர்விற்கு பங்களித்தது. கப்பல் கொள்கலன்களின் பற்றாக்குறை மற்றும் சரக்கு கட்டணம் உயர்வு ஆகியவை சர்வதேச சரக்கு இறக்குமதியை பாதித்தது. ஆனால் தற்போது கன்டெய்னர் தட்டுப்பாடு நீங்கி, கப்பல் கட்டணமும் குறைந்ததால் இறக்குமதி அதிகரித்துள்ளது. டயர் நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தையில் இருந்து தற்போது ரப்பரை கொள்முதல் செய்வதில்லை, மாறாக முன்பு சேகரிக்கப்பட்ட அல்லது இறக்கு மதி செய்யப்பட்ட ரப்பரை மட்டுமே பயன்படுத்துகின்றன. முடிந்தவரை விலையை குறைப்பதே இதன் நோக்கம். இதனால், விவசாயிகளுடன், சிறு வியாபாரிகளும் நெருக்கடிக்கு ஆளாகி னர். நவம்பர் இறுதி வரை இதே நிலை தொடரவே டயர் நிறுவனங்களின் இந்த நகர்வு.