states

img

அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது : உயர்நீதிமன்றம்

சென்னை,அக்.17- அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்; ஆளுநர் அதனை மீற முடியாது என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. தமிழக அரசை விமர்சித்து ஆளுநர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதற்கு அனைத்து  அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆளுநரை கண்டித்தும் திரும்பப்பெறக்கோரியும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி வீரபாரதி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சரவை குறித்தும் ஆளுநர் குறித்தும் மேற்கண்டவாறு தெரிவித்தது.