states

img

தில்லி போராட்டம் எங்களை வலுப்படுத்தியது

கே.வரதராசன் நகர் (திருச்சூர்), டிச.14 - தில்லியில் ஓராண்டுக்கும் மேலாக நடந்த காவியப் போரின் போது காவல்துறை யினர்  தடியடி  நடத்தினர். ஆனால் தில்லி போராட்டம் எங்களுக்கு மேலும் பலத்தை கொடுத்தது. இப்படி கூறியிருப்பது ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் இருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 35 ஆவது அகில இந்திய மாநாட்டு பிரதிநிதி களாக திருச்சூர் வந்துள்ள பூமி பிர்மி,  சுனிதா புனியா, ராம் சந்திரி ஆகியோர்தான். தில்லியில் விவசாயிகள் போராட்டத் திற்கு தற்காலிக திரை விழுந்தாலும், ராஜஸ்தானில் இடதுசாரிகள் மற்றும் விவ சாயிகள் சங்கம் தலைமையில் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. விவசாயிகளின் உரிமைகளைப் பறித்து, குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தாத அர சுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டாகப் போராடி வருகின்றனர். அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ந்து போரா ட்டக்காரர்களை வேட்டையாடி வருகிறது. கடுமையான சித்ரவதைகளைச் சகித்துக் கொண்டு அனைவரும் போராட்டத்தில் மீண்டும் தீவிரமாகிறார்கள். மாநாடு முடிந்து ராஜஸ்தான் திரும்பிய உடன் மூவரும் மீண்டும் போராட்டத்தில் பங்கேற்பார்கள். சுனிதா புனியா ராஜஸ்தான் சட்டமன்றத்தின் சிபிஎம்  உறுப்பினர் பல்வான் புனியாவின் மனைவியாவார். சுனி தாவும் ராம் சந்திரியும் விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர்கள். பூமி பிர்மி விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர்.