புதுதில்லி: நடப்பு ஆண்டில் ஒன்றிய அரசின் கடன் ரூ.155.80 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் ரூ.148.8 லட்சம் கோடி உள்நாட்டுக் கடனாகவும், ரூ.7 லட்சம் கோடி வெளிநாட்டுக் கடனாகவும் உள்ளது. மாநி லங்களவையில் வி.சிவதாசனுக்கு அளித்த பதிலில், மொத்த உள்நாட்டு வருமானத்தில் (ஜிடிபி) கடன் 57.3 சதவீதம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆண்டு வட்டி செலுத்த ரூ.9.4 லட்சம் கோடி தேவை. கொரோனா காரணமாக 2020-21 இல் கடன் அதிக ரித்ததாக ஒன்றிய அரசு நியாயப்படுத்தியது. கொரோனா வருவதற்கு முன்பே கடன் உயரத் தொடங்கியது என்பது புள்ளி விவரங்களிலிருந்து தெளிவாகிறது. 2017-18 இல் கடன் ரூ.82.9 லட்சம் கோடியாக இருந்தது. 2018-19 இல் 92.5 லட்சம் கோடியும், 2019-20 இல் ரூ.105.2 லட்சம் கோடியும், 2020-21இல் ரூ.122.1 லட்சம் கோடியும் கடன் ஏற்பட்டுள்ளது.
2021-22 இல் கடன் ரூ.138.9 லட்சம் கோடியாக அதிக ரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்தமுள்ள ரூ.45 லட்சம் கோடி ஒன்றிய பட்ஜெட்டில் ரூ.27 லட்சம் கோடி கடன். அதில் ரூ.9.4 லட்சம் கோடி வட்டிக்கு ஒதுக்க வேண்டும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 39 சதவீதமாக இது இருக்கும். கேரளாவின் கடனை பெரிய ஆபத்து என்று பிரச்சாரம் செய்யும் ஊடகங்களும் மற்றவர்களும் ஒன்றிய அரசின் பெரும் கடனைப் பற்றி பேசுவதில்லை என்று வி.சிவதாசன் சுட்டிக் காட்டினார். 4,500 கோடி ரூபாய் செலவில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு விமானம் வாங்கப்பட்டதாக நாளிதழ்க ளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், செலவ ழிக்கப்பட்ட தொகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, பாதுகாப்பு அமைச்சகம் ஒரு வரியில் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.