states

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 அன்று துவங்குகிறது!

புதுதில்லி, ஜன. 13 - நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி துவங்கும் என்று  ஒன்றிய அரசின் நாடாளுமன்ற விவகா ரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் துவங்கும் நிலை யில் 2023-24 நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், ஜனவரி 31-இல் துவங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை, மொத்தம் 2 பகுதிகளாக 27 அமர்வுகள் நடைபெறும் என்றும் பிரக லாத் ஜோஷி குறிப்பிட்டுள்ளார். “நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டதொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரை யுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6 வரையிலான 66 நாட்களில் 2 பகுதி களாக 27 அமர்வுகளாக இந்த கூட்டத் தொடர் நடைபெறும். ஒன்றிய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப் படும். அதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடைபெறும். பட்ஜெட் அமர்வின் போது, ​​2023 பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை  விடுமுறையாக இருக்கும்.

இந்த நேரத்தில் துறை ரீதியான நாடாளுமன்ற நிலைக்குழுக் கள் மானியங்களுக்கான கோரிக்கைகளை ஆய்வு செய்து, அமைச்சகங்கள்- துறைகள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடும். அதன்பிறகு நடக்கும் கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்” என்று அமைச்சர் பிரகலாத் ஜோஷி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 2023-ஆம் ஆண்டில் மொத்தம் 9 மாநி லங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இதில் மேகாலயா, நாகா லாந்து, திரிபுரா, மிசோரம் ஆகிய 4 வட கிழக்கு மாநிலங்களுடன் கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத னால் இந்த மாநிலங்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் பணவீக்கம், நாட்டில் நிலவும் வேலையின்மை உள்ளி ட்டவை முக்கிய பிரச்சனையாக தொடர்வ தால், இதனை சமாளிக்கவும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.