லக்னோ, ஜன.15- உ.பி. மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை, பங்கர் மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ -வான குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ஆம் ஆண்டு கும் பல் வல்லுறவுக்கு உள்ளாக்கி னார். சிறுமியின் தந்தை நீதி கேட்டுச் சென்ற நிலையில், அவ ரையும் செங்காரின் ஆதரவா ளர்கள் கொடூரமாக தாக்கி, பொய்வழக்கில் சிறைக்கு அனுப்பினர். அடுத்த 2 நாட்க ளில் அவர் சிறையிலேயே இறந்து போனார். பாதிக்கப்பட்ட சிறுமி, முதல்வர் ஆதித்யநாத் வீட்டு முன்பே தீக்குளித்து தற் கொலைக்கு முயன்றார். அப்போதும் செங்கார் மீது நட வடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் இந்த விவகாரத் தில் அலகாபாத் உயர் நீதி மன்றம் தலையிட்டு கண்டித்த பிறகே, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப் பட்டார். தற்போது குற்றமும் நிரூபிக்கப்பட்டு சிறைத் தண் டனை பெற்றுள்ளார். அவரது எம்எல்ஏ பதவியும் பறி போனது.
இந்நிலையில்தான், பாதிக் கப்பட்ட சிறுமியின் தாயார் ஆஷா சிங்கை உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது. மகளின் வாழ்க்கையை அழித்த குல்தீப் செங்காரின் தொகுதியான பங்கர்மாவ் தொகுதியையே ஆஷா சிங்கிற்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஒதுக்கியுள்ளார். “வன் முறை மற்றும் தாக்குதலுக்கு ஆளானவர் என்றால் உங்க ளுக்காக காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்கிற வலு வான செய்தியை இதன்மூலம் நாங்கள் எடுத்துரைக்க விரும் புகிறோம்” என்று அவர் கூறி யுள்ளார். ஆஷா சிங் தவிர, கோண்ட் பழங்குடியினரின் உரிமைக்கா கப் போராடிய ராம்ராஜ் கோண் டுக்கும் காங்கிரஸ் சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் ஷாஜகான்பூரில் முதல்வர் ஆதித்யநாத்தைச் சந்திக்கச் சென்ற ஆஷா பணியாளர் பூனம் பாண்டே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதி ராகப் போராடி சிறைசென்ற காங்கிரஸ் தலைவர் சதாப் ஜாபர் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.