states

img

நீதிபதி அப்துல் நசீரை ஆளுநராக நியமித்தது அவமானகரமானது; ஆபத்து நிறைந்தது

புதுதில்லி, பிப்.15- நீதிபதி அப்துல் நசீரை ஆளுநராக நிய மனம் செய்திருப்பது அவமானகரமானது; ஆபத்து நிறைந்தது என்று விமர்சித்துள்ள அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், அவ ரது நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செய லாளர் பி.வி. சுரேந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   நீதிபதி அப்துல் நசீர், ஆந்திரப்பிரதேச ஆளுநராக நியமனம் செய்திருப்பது நீதித்  துறை சுதந்திரத்தை ஒன்றிய அரசாங்கம் மீறி யுள்ளமைக்கு மற்றுமொரு உதாரணமாகும். இது மிகவும் அவமானகரமானதும், ஆபத்தா னதுமாகும். நீதித்துறையின் மீது மக்களுக்கு இருந்துவரும் நம்பிக்கையைக் கடுமையாகத் தகர்க்கக்கூடிய விதத்திலானதாகும்.   நீதித்துறையிலிருந்து ஓய்வுபெறும் நீதி பதிகளை, அரசமைப்புச்சட்டத்தின் மன்றங்க ளுக்கு மீண்டும் அமர்த்துவது குறித்து சமூ கத்தின் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விமர்  சனங்கள் எழுந்துள்ளன.  2012 ஆம் ஆண்டு  பாஜகவின் தலைவராக இருந்த  அருண் ஜெட்லி, “நீதிபதிகள் ஓய்வுபெறுவதற்கு முன்  பகிர்ந்திடும் சில தீர்ப்புகள், ஓய்வுபெற்ற பின்   சில பதவிகளைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்கி றது,” என்று கூறினார். இப்போது அப்துல் நசீர்  நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு எவரும்  மக்களைக் குறைகூற முடியாது. உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்த அப்துல் நசீருக்கு,  அவர் ஓய்வுபெற்ற ஆறு மாத காலத்திற்கு உள்ளாகவே, இந்த அரசியல் நியமனம் அவ ரைத் தேடி வந்திருக்கிறது. அவரும் அதற்கு  இசைவளித்திருக்கிறார். இது அரசமைப்புச் சட்டத்தையும், நீதித்துறையின் சுதந்திரத்தை யும் கேலிக்கூத்தாக்கவில்லையா?  

மனு(அ)தர்மம்,  அரசமைப்புச்சட்டத்தால் முற்றிலுமாக மறுதலிக்கப்பட்டிருக்கிறது. மனு(அ)தர்மம் மிகவும் ஒடுக்குமுறை நிறைந்த சாதியச் சிந்தனைகளையும், பெண்  களை வெறுக்கும் சிந்தனைகளையும் கொண்ட தும், பரப்புவதுமாகும். மனு(அ)தர்மத்தை, நம்  அரசமைப்புச்சட்டத்துடன் ஒப்பிட்டு, மனு (அ)தர்மம்தான் சிறந்த அதிநவீன இந்தி யச் சட்டமுறை என்றும், இப்போது இருந்து வரும் அரசமைப்புச்சட்டமும் இதர சட்டங் களும் காலனிய ஆட்சியாளர்களுடையது என்றும் ஒன்றிய ஆட்சியாளர்களால் கூறப்  பட்டு வருகிறது. இது இந்திய அரசியலில்  மிகவும் துரதிர்ஷ்டவசமாகும். இதுபோன்ற  சிந்தனைகள் இப்போது நீதிபதிகள் சிலரிட மிருந்தே வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. நீதிபதி  அப்துல் நசீர், மனு(அ)தர்மத்தைத் தூக்கிப்பிடிப்பவராக இருந்திருக்கிறார். எனவே, அதற்குக் கைமாறாகவே இந்தப் பதவி என்று மக்கள் கூறுகிறார்கள். இந்தப் பதவியை தான் ஏற்றுக்கொள்வ தாக ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் நீதி பதி அப்துல் நசீர், தான் தற்போதைய ஒன்றிய  அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் சித் தாந்தங்களுடனும்;  அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை விழுமியங்களாக விளங்கும் மதச்சார்பின்மை, ஜனநாயகம், பேச்சுரிமை மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை ஆகியவற்றுக்கும் எதிராகச் செயல் பட்டுக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுடன் தானும் உடன்பட்டிருப்பவரே என்பதை,  மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறார். இவரும் ஓய்வுபெறுவதற்கு முன்பு, கொலி ஜியத்தின் ஓர் அங்கமாக இருந்தவர்தான். 

உதாசீனப்படுத்தப்பட்ட அரசமைப்புச்சட்டம்

இத்தகைய நியமனங்களுக்கு ஒருவித செயல்முறை உருவாகி இருக்கிறது. தலைமை நீதிபதியாக இருந்த பி.சதாசிவம் ஓய்வு பெற்றபின் மோடி அரசாங்கத்தால் கேரள  ஆளுநராக நியமிக்கப்பட்டார். தலைமை  நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் நிய மன மாநிலங்களவை உறுப்பினரானார். அர சமைப்புச்சட்டத்தின் விழுமியங்களை யெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு, மக்க ளைக் கிண்டல் செய்யும் விதத்தில் ஆட்சி யாளர்களும், சில நீதிபதிகளும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.    ஆட்சியாளர்கள் நீதிபதிகளைப் பயன்படுத்திக்கொள்ளும் இத்தகைய செயல்களிலிருந்து, மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் இவ்வாறு நீதிபதி களைப் பயன்படுத்திக்கொள்வதற்கு எதி ராக, நீதித்துறையுடன் தங்கள் வாழ்க்கையை  இணைத்துக்கொண்டுள்ள அனைத்துத்தரப்பி னரும் கிளர்ந்தெழ வேண்டும்.   நீதித்துறை யை, ஆட்சியாளர்கள் ஆதிக்கம்  செலுத்து வதற்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும். உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதி பதிகளை நியமனம் செய்வதில், அவர்களை மாற்றுவதில், முழுமையான சுதந்திரமான  அரசமைப்புச்சட்ட நிறுவனத்திற்காகக் கிளர்ந்தெழ  வேண்டும். இதில் ஆட்சியாளர்  களின் கை ஓங்கக்கூடிய வகையில் இருந்தி டக் கூடாது. சென்னை  உயர்நீதிமன்றத்திற்கு  சமீபத்தில் நீதிபதியாக மிகவும் பிரச்சனைக்கு ரிய நபரான விக்டோரியா கௌரி நியமனம் செய்யப்பட்டிருப்பதிலிருந்து, நீதிபதிகளை நியமனம் செய்வதிலும் நீதித்துறை எந்த அளவிற்கு  மாறியிருக்கிறது என்பதை நமக்கு  நினைவூட்டியிருக்கிறது. நீதிபதி அப்துல் நசீர் ஆந்திரப்பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்  தன் கடும் எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்கி றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது (ந.நி.)