மணிப்பூரில் மீண்டும் பதற்றம் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச்சூடு
வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மணிப்பூர் பாஜகவின் வகுப்புவாத அரசியலால் கடந்த 11 மாதங்களாக பற்றி எரிந்து வரு கிறது. வன்முறைக்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மாநி லம் முழுவதும் இன்னும் வன்முறை குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் உயிருக்கு பயந்து மணிப்பூர் மக்கள் பொழுதை கழித்து வரும் நிலையில், மக்களவை தேர்தல் பிரச்சார ஆலோ சனைக் கூட்டத்திலும் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. செவ்வாயன்று உக்ருல் மாவட்டம் சிங்காய் சட்டமன்றத் தொகுதியில் உள்ள டீனெம் கிராமத்தில் மணிப்பூர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த பொதுக்கூட்டத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் திடீரென துப்பாக் கிச் சூடு நடத்தியது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மீது சந்தேகம் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத் தில் தாக்குதல் நடத்தப்பட்டதால் இது குக்கி - மெய்டெய் இடையேயான மோதல் கிடையாது என்றும், பாஜக மீது சந்தேகம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் ரூ.100 கோடி போதைப்பொருள் பறிமுதல்
மோடி பிரதமர் ஆன பின்பும், அதானி கையில் துறை முகத்தை தாரை வார்த்த பின்பும் நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் போதைப்பொருட்கள் மளிகைப் பொருட் கள் சப்ளை போன்று நடைபெற்று வரு கிறது. ஆனால், இதனை மறைக்க பிரதமர் மோடி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை குற்றம்சாட்டி தப்பிக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா தலைநகர் மும்பை யில் ரூ.100 கோடி மதிப்பிலான 9.82 கிலோ கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இரு வெளிநாட்டு பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குவங்கத்தில் துவங்கியது தேர்தல் வன்முறை பாஜக, திரிணாமுல் மோதல்
மேற்குவங்க மாநிலத்தில் பாஜக - திரிணாமுல் காங்கி ரஸ் குண்டர்கள் தேர்தல் நேரங்களில் அரசியல் ஆதாயத்துக்காக வன்முறையில் ஈடுபடுவது வழக்கம். இதன் காரணமாகவே அம்மாநிலத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெறு வது வழக்கம் என்றான நிலையில், வர விருக்கும் மக்களவை தேர்தல் கூட 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், கூச்பெஹார் மாவட் டத்தில் செவ்வாயன்று இரவு ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நிஷித் பிராமணியின் பாஜக பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகி லேயே, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பேரணி தொடங்க இருந்தது. இந்நிலையில் திடீரென பாஜகவின ருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தொண் டர்களுக்கும் இடையே மோதல் வெடித் தது. இந்த மோதல் சம்பவத்தில் போலீ சார் உட்பட இருதரப்பிலும் பலர் காய மடைந்தனர். இதனால், கூச் பெஹாரில் புதன்கிழமை மாலை வரை பதற்றமான சூழலே நிலவியது. மேற்குவங்கத்தில் பெரும்பாலும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண் ணிக்கை நாளில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் வன்முறையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் தற்போது தேர்தல் பிரச்சாரச் சூழலிலேயே அங்கு வன்முறை சம்பவங்கள் ஆரம்பித்து விட்டன.
முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த தலைவர்கள் ‘இந்தியா’ கூட்டணிக்கு பெருகும் ஆதரவு!
சென்னை, மார்ச் 20 - மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், சென்னை அண்ணா அறி வாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந் தித்து பதினெட்டாவது மக் களவைத் தேர்தலில் ‘இந் தியா’ கூட்டணிக்கான தங் களின் ஆதரவைத் தெரி வித்தனர். தமிழ்நாட்டில் மக்க ளவைத் தேர்தல் வருகிற ஏப்.19 ஆம் தேதி ஒரே கட்ட மாக நடைபெறுகிறது. இந்த நிலையில், மாநிலத்தில் ஆளும் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை யும் அறிவித்து வருகிறது. இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, அப்துல் சமது எம்எல்ஏ ஆகியோர் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து, தங்களின் ஆத ரவைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மற் றும் நிர்வாகிகள், தமிழ் நாடு விவசாயிகள் தொழி லாளர்கள் கட்சித் தலை வர் பொன். குமார் மற்றும் நிர்வாகிகள், சமத்துவ மக் கள் கழகத் தலைவர் எர் ணாவூர் நாராயணன் மற் றும் நிர்வாகிகள், மக்கள் விடுதலைக் கட்சித் தலை வர் முருகவேல் ராஜன், தமிழ்ப்புலிகள் கட்சித் தலை வர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
ஜீரோவுடன் ஜீரோ சேர்ந்த பாஜக - பாமக கூட்டணி! அதிமுக ஜெயகுமார் சாடல்
ஜீரோக்கள் சேர்ந்த கூட்டணிதான் பாஜக - பாமக கூட்டணி என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் டி. ஜெயகுமார் சாடியுள்ளார். “ஒரு பேட்டியின் போது, பாஜகவிற்கு எத்தனை மார்க் போடுவீர் கள் என்று கேட்டதற்கு ஜீரோக்கு கீழே தான் போடுவேன் என்று மோசமான விமர்சனத்தை வைத்தவர்கள் தான் பாமகவினர். பாஜகவை ஜீரோ என்று சொல்லியவர்கள். இப்போ அந்த ஜீரோ.. இந்த ஜீரோ.. எல்லாம் ஒன்றாகியிருக்கி றது என்று தான் எடுத்துக் கொள்ள முடி யும். எனவே, பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. எந்த தாக்கமும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்ப்பிணிகளுக்கு இனி 3 தவணைகளில் ரூ.14 ஆயிரம் மகப்பேறு நிதியுதவி
தமிழக அரசு அறிவிப்பு சென்னை, மார்ச் 20- தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் கர்ப்பி ணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் ரூ. 14 ஆயிரம் நிதியுதவி, வரும் ஏப் ரல் 1 முதல் 3 தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி யுதவி திட்டம் மூலம் தமிழக அரசு நிதி யுதவி அளித்து வருகிறது. கருத்தரித்த 12 வாரத்துக்குள், அருகில் உள்ள ஆரம்பசுகா தார நிலையத்தில் பெயரை பதிவு செய்து, அதற்கான எண்ணைப் பெற்றவுடன் பெண் ணின் வங்கிக் கணக்கில் ரூ. 2 ஆயிரம் செலுத்தப்படும். பின்னர் 4 மாதத்துக்கு பிறகு 2-ஆவது தவணையாக ரூ. 2 ஆயிரம் மற்றும் சத்துமாவு, ஆவின் நெய், கதர் துண்டு, இரும்புச்சத்து டானிக் உள்ளிட் டவை அடங்கிய ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான பெட்டகம் இருமுறை அளிக்கப்படும். அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் 3-ஆவது தவணையாக ரூ. 4 ஆயிரம், குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ. 4 ஆயி ரம், குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் என ரூ. 14 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் என ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படும். இதுவரை 5 தவணைகளாக வழங்கப் பட்டு வந்த ரூ. 14 ஆயிரம் நிதியுதவி இனி 3 தவணைகளில் வழங்கப்படவுள்ளது. கர்ப்ப காலத்தின் 4-ஆவது மாதத்தில் ரூ. 6 ஆயிரமும், குழந்தை பிறந்த 4-ஆவது மாதத் தில் ரூ. 6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-ஆவது மாதத்தில் ரூ. 2 ஆயிரமும் வழங் கப்பட இருக்கிறது. அதேபோல், பேறு காலத்தில் மூன்றா வது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங் கப்பட உள்ளன. இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர வுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள் ளது. இதற்கான அரசாணையும் பிறப் பிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2 லட்சத்தை தாண்டியது!
சென்னை, மார்ச் 20- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, வழக்கத்தை விட ஒரு மாதத்துக்கு முன்பாக- மார்ச் 1 முதலே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு அரசுப் பள்ளி களில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர் சேர்க்கை என்ற இலக்கை கொண்டு பள்ளிக்கல்வித் துறை தீவி ரமாக களமிறங்கியிருக்கிறது. அந்த வகையில் கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை அரசுப் பள்ளிகளில் 2 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 30-க்குள் பள்ளிக்கல்வித் துறையின் 4 லட்சம் மாணவர் சேர்க்கை என்ற இலக்கு எட்டப்பட்டு விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்!
சென்னை, மார்ச் 20 - திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை, மாநில ஊழல் தடுப்பு, கண்கா ணிப்புப் பிரிவு போலீசார், கடந்த டிசம்பர் மாதம் கைது செய்து மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர். அங்கித் திவாரி, ஜாமீன் கோரி திண்டுக்கல் முதன்மை நீதி மன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் தொடர் பான சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனினும், தமிழ்நாட்டை விட்டு வேறு எங்கும் உரிய அனுமதி பெறாமல் செல்லக் கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.
ஜீரோவுடன் ஜீரோ சேர்ந்த பாஜக - பாமக கூட்டணி! அதிமுக ஜெயகுமார் சாடல்
ஜீரோக்கள் சேர்ந்த கூட்டணிதான் பாஜக - பாமக கூட்டணி என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் டி. ஜெயகுமார் சாடியுள்ளார். “ஒரு பேட்டியின் போது, பாஜகவிற்கு எத்தனை மார்க் போடுவீர் கள் என்று கேட்டதற்கு ஜீரோக்கு கீழே தான் போடுவேன் என்று மோசமான விமர்சனத்தை வைத்தவர்கள் தான் பாமகவினர். பாஜகவை ஜீரோ என்று சொல்லியவர்கள். இப்போ அந்த ஜீரோ.. இந்த ஜீரோ.. எல்லாம் ஒன்றாகியிருக்கி றது என்று தான் எடுத்துக் கொள்ள முடி யும். எனவே, பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. எந்த தாக்கமும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வி பயத்தில் மோடி தூக்கம் வராமல் தவிக்கிறார்: அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி
புதுக்கோட்டை, மார்ச் 20 - தோல்வி பயத்தின் காரணமாக பிரதமர் மோடி தூக்கமின்றி தவித்து வருகிறார் என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. புதுக் கோட்டையில் செவ்வாய்க்கிழமை மாலை அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறிய தாவது: எத்தனைக் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ் நாட்டில் பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை. திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறு வோம். திமுகவினர் தூக்கமின்றி இருப்பதாக மோடி கூறி வருகிறார். வெற்றி நிச்சயம் என்பதால், நாங்கள் நிம்மதியாகத்தான் தூங்கி எழுந்து வரு கிறோம். தோற்று விடுவோமோ என்ற பயத்தில் தான், அவருக்கு தூக்கம் வராமல் அடிக்கடி தமிழ் நாட்டுக்கு வருகிறார். தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிட்டால், வைப்புத் தொகையைத் திரும்பப் பெறவே கடு மையாக போட்டியிட வேண்டும். தமிழ்நாட்டின் ஆளுநர் கூட பீகாரில் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியாகின்றன. அப்படியிருந்தால் அது தமிழ்நாட்டுக்கு நல்ல செய்தியாக இருக்கும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பொ றுத்தவரை, நாங்கள் அப்போதும் எதிர்த் தோம். இப்போதும் எதிர்க்கிறோம். அதிமுக நினைத்திருந்தால் அந்தச் சட்டத்தை அப் போதே நிறைவேற்ற விடாமல் செய்திருக்க லாம். அவர்கள் ஆதரித்து வாக்களித்தார்கள். இப்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சியாக தங்களைக் காட்டிக் கொள்ள நினைத் தால், அதை இஸ்லாமியர்கள் நம்ப மாட்டார்கள். மாநிலங்கள் இந்தச் சட்டத்தை அமலாக்குவ தை மறுக்க முடியாது என்று அமித்ஷா தெரிவித் துள்ளார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அந்தச் சட்டத்தையே திரும்பப் பெறுவோம். யார் வளர்ந்திருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும். தமிழ்நாட்டில் ஒரே கட்ட மாக தேர்தல் நடத்தப்படுகிறது என்றால், தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது என்பது தெரிகிறது. இவ்வாறு ரகுபதி கூறினார்.