ஹைதராபாத், மார்ச் 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தெலுங்கானா வீராங்கனையுமான தோழர் மல்லு ஸ்வராஜ்யம் சனிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 92. ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் கேர் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் கால மானார். 1931- ஆம் ஆண்டு பீமிரெட்டி ராமி ரெட்டி மற்றும் சொக்கம்மா தம்பதியினருக்கு இன்றைய சூர்யபேட்டா மாவட்டம் (நல்கொண்டா) கர்விரா கொட்டகுடேமில் நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கானா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜாம்பவான்களில் ஒருவர் மல்லு ஸ்வராஜ்யம். மக்கள் நலனுக்காக இயக்கங்களை திரட்டிப் போராடினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆந்திராவிலும், தெலுங்கானா விலும் பலம் வாய்ந்த அமைப்பாக உருவாக்கி யவர்களில் மல்லு ஸ்வராஜ்யமும் ஒருவர். கம்பீரக் குரலில் பேசும் அவர் துணிச்சலான நட வடிக்கை, ஆளுமையால் மக்கள் தலைவ ராக ஆந்திர மாநிலத்தில் திகழ்ந்தார். அவரது மரணம் கம்யூனிஸ்ட் உலகில் ஒரு வெற்றி டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் ஞாயிறு காலை 9.45 மணி வரை வைக்கப் பட்டிருந்தது. அவரது உடலுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள், மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர்கள், மாநிலச் செயலா ளர் பி.வி.ராகவுலு மற்றும் தம்மினேனி வீரபத்ரம், நாராயணா, கட்சி ஊழியர்கள் தொண்டர்கள் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர்கள் அஞ்சலி
தெலுங்கானா பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எர்ரபெல்லி தயாகர் ராவ் மற்றும் கல்வகுந்த்லா கவிதா எம்எல்சி, தெலுங்கானா ஜன சமிதியின் பேரா சிரியர் கோதண்டராம், முன்னாள் எம்எல்சி பேராசிரியர் கே. நாகேஷ்வர் ஆகியோர் ஸ்வராஜ்யம் உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். “ஸ்வராஜ்யம் வாழ்க்கை அனைத்துத் தலைவர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்கள் இயக்கங்களுக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காக இருக்கும். அவரது வாழ்க்கை வர லாற்றை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் எர்ரபெல்லி தயாகர் ராவ் மற்றும் கல்வகுந்த்லா கவிதா ஆகி யோர் தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் ஞாயிறு காலை நல்கொண்டாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பகல் 1.30 மணிவரை நல்கொண்டா கட்சி அலு வலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கிருந்து பிரகாசம் பஜார், ஆர்.பி.ரோடு வழி யாக அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இரங்கல் கூட்டம் நடை பெற்றது. மல்லு ஸ்வராஜ்யத்தின் குடும்பத்தினர் விருப்பப்படி அவரது உடல் மருத்துவ மாண வர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக நல்கொண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டது.