states

img

ஆயுதங்களை ஒப்படைப்பது ஏமாற்றுவேலை குக்கி- சோ பழங்குடி தலைவர்கள் கண்டனம்

ஆயுதங்களை ஒப்படைப்பது ஏமாற்றுவேலை 
குக்கி- சோ பழங்குடி தலைவர்கள் கண்டனம்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. அமித் ஷாவுக்கு மிக நெருக்கமான ஆளுநர் அஜய் பல்லாவின் கட்டுப்பாட்டில் தற்போது மணிப்பூர் மாநிலம் உள்ளது. இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு  மணிப்பூரில் வன்முறையை நிகழ்த்தி வரும் மெய்டெய் தீவிரவாத ஆயுதக் குழு வான அரம்பாய் தெங்கோலின் தலை வர்களை ஆளுநர் அஜய் பல்லா சந்தித் தார். இதற்கு குக்கி-சோ பழங்குடியின மனித உரிமைகள் அமைப்பான கோஹூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆளுநர் அஜய் பல்லாவின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அரம்பாய் தெங்கோல் தங்களிடம் இருந்த  ஆயுதங்களை மணிப்பூர் காவல்துறை யிடம் ஒப்படைத்து வருவதாக செய்திகள் வருகின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்ட ஆயுதங்களை  அரம்பாய் தெங்கோல் அமைப்பு ஒப்படைத்துள்ளது.  இத்தகைய சூழலில்,”அரம்பாய் தெங்கோல் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைப்பது ஏமாற்றுவேலை” என குக்கி- சோ பழங்குடி தலைவர்கள் மன்றம் (ITLF) மற்றும் பழங்குடி ஒற்றுமை குழு (COTU) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இரண்டு அமைப்பு களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை யில், “வன்முறைக்கு காரணமான மெய்டெய் ஆயுத தீவிரவாத குழுவான அரம்பாய் தெங்கோல் 300 ஆயுதங்களை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அரம்பாய் தெங்கோல் அமைப்பு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இம்பால் பள்ளத்தாக்கு குடோனில் 6,000க்கும் மேற்பட்ட ஆயுதங்களை கொள்ளையடித்தது. அதில் வெறும் 5 சதவீதம் (300) மட்டுமே ஒப்படைத்துள்ளது. இது வெறும் ஏமாற்று வேலை தான். அதாவது தாங்கள் நல்லவர்கள் என்ற பொது பிம்பத்தை வெளிப்படுத்தவே அரம்பாய் தெங்கோல் அமைப்பு இந்த நாடகத்தை அரங்கேற்றி வருகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.