states

img

“6ஏ” சட்டத்திருத்தம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு; சிபிஎம் வரவேற்பு

கவுகாத்தி வங்கதேசத்தில் இருந்து அசாமிற்கு புலம்பெயர்ந்தோருக்கு இந்திய  குடியுரிமை வழங்குவதற்கான “6ஏ” சட்டத்திருத் தம் செல்லும் என்று டி.ஒய். சந்திரசூட் தலைமை யிலான உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வியாழனன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசாம் மாநிலக்குழு வரவேற்பு தெரி வித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் அசாம் மாநிலச் செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தார் வெளியிட்ட காணொலியில்,”நீண்ட நீதி செயல்முறைக்குப் பிறகு குடியுரிமைச் சட்டம் 1985இன் பிரிவு “6ஏ”  அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அசாம் மாநிலக் குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.  அசாம் ஒப்பந்தம் பற்றி அனைவருக்கும் தெரியும். அசாம் ஒப்பந்தம் 1985 ஆகஸ்ட் 15  அன்று கையெழுத்தானது. இது அசாமில் சட்ட விரோத அந்நியர்களை கண்டறிவதற்கும், நாடு  கடத்துவதற்குமான கடைசி தேதியாக 1971  மார்ச் 25-ஐ நிர்ணயித்தது. அசாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்திய நாடாளுமன்றம் குடியுரிமைச் சட்டம் 1955-க்கு திருத்தங்களை மேற்கொண்டு, பிரிவு 6ஏ-ஐ சேர்த்தது. இது அசாமில் சட்டவிரோத அந்நியர்களை கண்டறி வதற்கும் நாடு கடத்துவதற்குமான கடைசி தேதியாக 1971 ஆகஸ்ட் 15-ஐ குறிப்பிட்டது. இதனை எதிர்த்து அசாமைச் சேர்ந்த சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. சிபிஎம் அசாம் மாநிலக்குழுவும் பிரிவு 6ஏ செயல்முறையில் சட்டரீதியாக தலை யிட முடிவு செய்தது. அதன்படி, தலையீட்டு மனு எண் 26869-2023 தாக்கல் செய்யப்பட்டது.

அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த பிறகு,  உச்சநீதிமன்றம் நன்கு ஆராயப்பட்ட தீர்ப்பை  வழங்கியுள்ளது. இது அசாமுக்கு தொடர்புடைய வகையில், 1971 மார்ச் 25 கால வரம்பான 2021 இறுதி வரை தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC)  புதுப்பிக்கும் இறுதி செயல்முறை உடனடியாக துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் உறுதிப் படுத்துகிறது. ஏற்கனவே இறுதி பட்டியல் முடிக்கப் பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பட்டியல் உடன டியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப் பாடு மற்றும் கோரிக்கை ஆகும். மேலும் புதுப்பி க்கப்பட்ட பட்டியலை இறுதி செய்வதற்கான, இறுதி செயல்முறையும் விரைவுபடுத்தப்பட வேண்டும். அசாம் குறித்த விசாரணை உள்ளிட்ட அடுத்த கட்டத்திற்கு நாங்கள் செல்வோம். உச்சநீதிமன்றத்தின் 5 அமர்வு கொண்ட அரசியலமைப்பு நீதிபதிகள் அமர்வின் இந்த தீர்ப்பைக் கருத்தில் கொண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) அமலாக்கம் உடனடி யாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை யை முன் வைக்கிறோம்” என அவர்கூறினார்.