புதுதில்லி, ஜன.10- வெறுப்பைத் தூண்டும் பாஜக தலை வர்களின் பேச்சுக்கள் தொடர்பாக பிருந்தா காரத் தொடர்ந்த வழக்கை கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வுக்கு மாற்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர். ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டம், மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவ தாக கூறி, கடந்த 2020-ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகள், சிறுபான்மையினர் அமைப்புகள் நாடு முழுவதும் போராட் டம் நடத்தினர். தலைநகர் தில்லியி லுள்ள ஷாகீன் பாக் பகுதியில், பல ஆயி ரக்கணக்கானோர் தொடர் போராட் டத்தை முன்னெடுத்தனர். அப்போது, 2020 ஜனவரி 27 அன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய பாஜக அமைச்சர் அனுராக் தாக்குர், ‘தேசத் துரோகிகளை சுட்டு வீழ்த்த வேண்டும்’ என்று வெறுப்பைத் தூண்டும் வகை யில் பேசினார். “தேஷ் கே கதாரோன் கோ, கோலி மாரோன் சலோன் கோ” என்று இந்தியில் முஸ்லிம்களுக்கு எதி ராக வெறுப்பை கக்கினார். இதேபோல, பாஜக தலைவர் பர்வேஷ் வர்மா வும் முஸ்லிம்களை ஆக்கிரமிப்பாளர் களாகவும், வல்லுறவாளர்களாகவும் சித்தரித்து வெறுப்புணர்வைத் தூண்டி னார். அப்போதே, இவர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153ஏ (வெறுப்புணர்வைத் தூண்டுதல்), 153பி (தேச ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற் படுத்துதல்), 295ஏ (மத உணர்வு களைப் பாதிப்படையச் செய்தல்) உள் ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய (FIR) வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் கே.எம். திவாரி ஆகியோர் சார் பில் தில்லி காவல்துறையில் புகார் மனு அளிக்கப்பட்டது.
காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், நீதிமன்றத்தில் முறையிடப் பட்டது. அங்கு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “இது நடவடிக்கை எடுக் கும் அளவிலான குற்றமில்லை” என ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தில்லி காவல்துறை பதிலளித்தது. இத னால், “இந்த விவகாரம் தனது அதி காரத்துக்கு உட்பட்டது அல்ல” என்று உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு களை சுட்டிக்காட்டி, விசாரணை நீதி மன்றமும் வழக்கைத் தள்ளுபடி செய் தது. பிருந்தா காரத், தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், அங்கும் இந்த வழக்கு ஏற்கப்பட வில்லை. இதையடுத்து, பிருந்தா காரத் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய் தார். அங்கு இந்த மனு, நீதிபதிகள் சஞ் சீவ் கண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கட் கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “இதே போன்ற பிரச்சனை கள் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள் ளதா?” என்று பிருந்தா காரத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதி சஞ்சீவ் கண்ணா கேள்வி எழுப்பினார். அதற்கு, “வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதி ராக நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்கெனவே, நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையி லான அமர்வு விசாரித்து வருவதாக பிருந்தா காரத் தரப்பு வழக்கறிஞர் தெரி வித்தார்.
“இதையடுத்து, இந்த வழக்கும் கே.எம். ஜோசப் அமர்வு முன்பு பட்டியலி டப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்று குறிப்பிட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “மாண்புமிகு தலைமை நீதி பதியின் உத்தரவுக்கு உட்பட்டு கே.எம். ஜோசப் அமர்வு முன் இந்த விவகாரம் பட்டியலிடப்படும்” என்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி கே.எம். ஜோசப் தலை மையிலான உச்ச நீதிமன்ற அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2022 அக்டோபரில், தரம் சன் சாத் என்ற சாமியார்கள் மாநாட்டில் வெறுப்பூட்டும் பேச்சுகள் பேசப்பட்டது தொடர்பான மனுக்களை விசாரித்த நீதி பதி கே.எம். ஜோசப் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக காவல்துறை தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று உத்தரவிட்டது. இதுதொடர் பான வழக்கையும் விசாரித்து வரு கிறது. தற்போது அதனுடன் சேர்த்து பிருந்தா காரத் தொடர்ந்த வழக்கும் விசாரிக்கப்பட உள்ளது.