புதுதில்லி, மார்ச் 2 - இந்தியாவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி ஆகி யோரைக் கொண்ட குழுவின் பரிந்து ரையின் பேரிலேயே, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தோ்தல் ஆணையர்கள் ஆகியோரை நியமிக்க கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமை யில், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்தது.
அப்போது, “தலைமை தேர்தல் ஆணையர் பதவிக் காலம் 6 ஆண்டு கள்; ஆனால், பொதுவாகவே தலை மை தேர்தல் ஆணையர் என்பவர் 2 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருப்பது இல்லை. குறுகிய கால பதவிதான் அவர்களுக்கு வழங்கப்படு கிறது; அத்துடன் 18 ஆண்டுகளில் 14 தலைமை தேர்தல் ஆணையர்கள் மாற்றப்பட்டிருக்கின்றனர்; ஒருவர் கூட 6 ஆண்டுகள் பதவிக்காலமும் முழு மையாக இருந்ததில்லை; இது ஜனநா யக நாட்டிற்கு நல்லதல்ல” என்று நீதிபதிகள் தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர். குறிப்பாக, “ஒன்றிய அரசு அதி காரியான அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது” தொடர்பாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “தேர்தல் ஆணையரை நிய மிக்கும் விவகாரத்தில் சுதந்திரமான நடைமுறை தேவை” என்றும், “அதற் காக ஒரு முன்மாதிரியான தேர்வுக் குழுவை உருவாக்குவது காலத்தின் தேவை” என சுட்டிக்காட்டியிருந்தனர். இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங் கள் நிறைவடைந்த நிலையில், நவம்பர் 24-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் வியாழக்கிழமையன்று தீர்ப்பு வழங்கிய கே.எம். ஜோசப் தலைமை யிலான உச்சநீதிமன்ற அமர்வு, “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நிய மனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்; சிபிஐ இயக்குநர் தேர்வைப் போல வெளிப்படையாக தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும்” என்றும் கூறிய நீதிபதிகள், “தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணை யர்களை பிரதமர், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்து குடியர சுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும்; அவர்களையே தேர்தல் ஆணையர்களாக நியமிக்கவேண் டும்” என்று முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு
புதுதில்லி, மார்ச் 2- தேர்தல் ஆணையர்களின் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (அல்லது பெரிய எதிர்க்கட்சியின் தலைவர்) மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரடங்கிய குழுவின் அறிவுரையின் பேரில் குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று, உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு அளித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இந்த நடைமுறையையே அமல்படுத்திட வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவின்கீழ் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்திட ஒரு சுயேச்சையான மற்றும் சுதந்திரமான தேர்தல் ஆணையம் அமைவதற்கும், அதனை வலுப்படுத்துவதற்கும் இது ஒன்றே சரியான நிலைப்பாடாகும் என்ற அடிப்படையில் அந்தத் திசைவழியில் முன்னோக்கி எடுத்து வைக்கப்பட்டுள்ள ஓர் அடியாகும். தேர்தல் ஆணையத்தை ஆட்சியாளர்கள் அடிபணிய வைத்திட மேற்கொள்ளும் அனைத்துவிதமான வடிவங்களிலிருந்தும், அது தன்னை “ஒதுக்கி” வைத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அமர்வாயம் மேலும் கூறியுள்ளது. மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) இயக்குநர், லோக்பால் போன்ற வற்றின் நியமனங்கள் சம்பந்தமாக நாடாளுமன்றம் என்ன சட்டம் நிறைவேற்றி யிருக்கிறதோ அதே அடிப்படையிலேயே, வெளிப்படைத் தன்மையுடனும், ஜனநாயக முறையிலும், தேர்தல் ஆணையத்தின் நியமனமும் அமைந்திட வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் கூறிவந்திருக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது. (ந.நி.)