https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
நிறுத்த வேண்டும்!
2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 25 சதவீதம் பேர் தினக் கூலி உழைப்பாளிகள். ஆழமான நெருக்கடி மிக வும் நலிவடைந்தவர்களை தற்கொலைக்கு தள்ளி விடுகிறது. தமது கூட்டுக் கொள்ளை களவாணி முதலாளிகளுக்கு ரூ.11 லட்சம் கோடி தள்ளுபடி செய்ததற்கு மாறாக, பணமதிப்பிழப்பு மற்றும் ஊர டங்கால் பாதிக்கப்பட்ட நலிவடைந்தவர்களுக்கு நேரடி நிதி தரப்பட்டிருந்தால் பல உயிர்களை காப் பாற்றியிருக்கலாம். இந்தியாவின் எதிர்கால சந்ததி யினரை அழிப்பதை மோடி அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
முறியடிப்போம்!
2021-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங் கள் 15% அதிகரிப்பு! - செய்தி
பிற்போக்கு சக்திகளின் நச்சுத்தனமான வெறுப்பு பிரச்சாரங்கள் காரணமாக நமது சமூகம் பல வழி களில் பாதிக்கப்படுகிறது. அதில் ஒன்று பெண் களுக்கு எதிரான குற்றங்கள். இந்த சக்திகள் மிக வும் பிற்போக்குத்தனமான பழைய சமூக நடை முறைகளை புனரமைக்க முயல்கின்றன. இதனை எதிர்க்க வேண்டும்; முறியடிக்க வேண்டும்.