தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் ராமண்ணாபேட்டையில் அதானி குழுமம் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெலுங்கானா மாநிலச் செயலாளர் தம்மினேனி வீரபத்ரம் முன்னிலையில் கட்சி ஊழியர்களுடன் சிமெண்ட் தொழிற்சாலைக்கு முன்மொழியப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வு முடிவில்,”சிமெண்ட் தொழிற்சாலையை நிறுவுவது குறித்து தெலுங்கானா அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்” என தம்மினேனி வீரபத்ரம் வலியுறுத்தினார்.