சென்னை,டிச.5- உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என ஒன்றிய அரசை இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் கோ.அரவிந்தசாமி, மாநிலச் செயலாளர் க. நிருபன் சக்கரவர்த்தி ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இந்திய நாடு முழுவதும் 13,404 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளது, அதற்கான பணி யிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் 239 முதல்வர், 23 துணை முதல்வர், 1409 முதுகலை ஆசிரியர், 3176 பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், 385 நூலகர் என காலிப்பணியிடங்கள் உள் ளன என கேந்திரிய வித்யாலயா இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக உயர்கல்வி நிறுவ னங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாமல் ஆசிரியர், பேராசிரியர் நியமனம் என்பது உள்ளது. ஒருபுறம் கேந்திரிய வித்யாலயா பள்ளி யில் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் காலிப் பணியிடங்களை அறிவித்து மறுபுறத்தில் சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாமலும் உள்ளது.
குறிப்பாக சென்னையில் உள்ள ஐஐடியில் பேராசிரி யர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற் றாமலும் ஒரு பிரிவினருக்கு மட்டுமே கூடு தலான வாய்ப்பை அதிகப்படுத்தி, பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் வாய்ப்பை மறுத்துள்ளது. பொதுப்பிரிவில் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் என 515 பேரும், ஓபிசி (OBC) யில் 62 பேரும் எஸ்சி., எஸ்டி பிரிவினர்களுக்கு 16 பேரும் உள்ளனர். இதில் பழங்குடியினர்களுக்கான இணைப்பேராசிரியர் பணியில் ஒருவரைக் கூட நிரப்பப்படாமலே உள்ளது. தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகளை பின்பற்றாமல் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் மீதும் சமூக நீதியை காப்பாற்ற தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் எந்தவித சமரசமும் இல்லாமல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் காலிப் பணியிடங்களை நியமிக்க வேண்டும் .அதை முறைப்படுத்த வேண்டும். அனைவருக்குமான சம வாய்ப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.