திருநெல்வேலி, ஜூலை 27- நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜ லிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 53) தொழிலாளி. இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இவரது மகள் பாப்பா (18) நெல்லை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார். இதற்கான கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை முத்துக்குமார் இரண்டு தவணைகளாக செலுத்தினார். அவர் கூலி தொழிலாளி என்பதால் குடும்பச் செல வுக்கு போதிய பணம் இன்றி தவித்துள் ளார். இருந்த போதிலும் மகள் படிப்பிற் காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து செலுத்தியதாக கூறப்படுகிறது. தனது படிப்பு செலவுக்காக பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி பாப்பா மனவேதனை அடைந்தார். செவ்வாய்க்கிழமை மாலை வீட்டு கதவை உள்புறமாக பூட்டி விட்டு பாப்பா துப்பட்டா வால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த களக்காடு காவல் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் பாப்பாவின் கைப்பையை சோதனையிட்டபோது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கி யது. அதில் அவர் தனது படிப்பு செலவுக் காக பெற்றோர்களை சிரமப்படுத்திவிட்ட தால் தற்கொலை செய்ய முடிவு எடுத்த தாக எழுதி இருந்ததாக போலீசார் தெரி வித்தனர்.