states

img

நாடாளுமன்றத்தில் 2-ஆவது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி - ஒத்திவைப்பு!

புதுதில்லி, ஏப்.5- எரிபொருள் விலை உயர்வுக்கு எதி ரான, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2-ஆவது நாளாக அமளி யில் ஈடுபட்டனர். திங்களன்று மாநிலங்க ளவை முழுமையாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், செவ்வாயன்று மக்களவை யும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக் கப்பட்டது. இந்தியாவில் முன்னெப்போதும் இல் லாத அளவிற்கு பெட்ரோல், டீசல், சமை யல் எரிவாயு சிலிண்டர் விலைகள் உயர்ந்து வருகின்றன. கடந்த 15 நாட்களில் மட்டும் பெட்ரோல் - டீசல் விலை 9 ரூபாய் 20 காசு கள் உயர்ந்துள்ளது. இந்த எரிபொருள் விலை உயர்வினால் மக்கள் கடும் பாதிப் புக்கு ஆளாகியுள்ளனர். மார்ச் 22-க்குப் பிறகு, ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் இதுவரை 13 முறை விலை  உயர்வு செய்யப்பட்டுள்ளது. செவ்வா யன்றும் பெட்ரோல், டீசல் விலை தலா 80 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக தலைநகர் தில்லி யில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104  ரூபாய் 61 காசுகளாகவும், டீசல் விலை 95 ரூபாய் 87 காசுகளாகவும் உயர்ந்துள் ளது.

இதுவே சென்னையில் பெட்ரோல் 110 ரூபாய் 11 காசுகளாகவும், டீசல் 100 ரூபாய் 18 காசுகளாகவும், கொல்கத்தா வில் பெட்ரோல் 114 ரூபாய் 28 காசுகளாக வும், டீசல் 99 ரூபாய் 02 காசுகளாகவும், ஜெய்ப்பூரில் பெட்ரோல் 117 ரூபாய் 15 காசு களாகவும், டீசல் 100 ரூபாய் 11 காசுகளாக வும் ஹைதராபாத்தில் 118 ரூபாய் 59 காசு களாகவும், டீசல் 104 ரூபாய் 62 காசுகளாக வும் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் 119 ரூபாய் 67 காசு கள், டீசல் 103 ரூபாய் 92 காசுகள் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.  இது பல்வேறு அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்வுக்கும் வித்திட்டுள்ள தால், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கடந்த ஒரு வாரமாகவே காங்கிரஸ் உள் ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினா்கள் அவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்து வரு கின்றனர். ஆனால், மோடி அரசு விவா தத்திற்கு தயாராக இல்லை. இதையொட்டி, எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தால்,  திங்கட்கிழமை நாள் முழுவதும் மாநி லங்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலை யில், செவ்வாயன்று மக்களவையும் நண் பகலுக்கு உள்ளாகவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. காலை 11 மணிக்கு அவை கூடியதும்,  காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி யும், திமுக-வின் டிஆர் பாலுவும் கடந்த இரு வாரங்களில் 13 முறை உயர்த்தப்பட்ட எரி பொருள் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 சபாநாயகர் ஓம் பிர்லாவோ, அதனை அனுமதிக்காமல் கேள்வி நேரத்தைத் தொட ரவே, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சி உறுப்பி னர்கள் அவையின் மையப்பகுதியை முற்று கையிட்டு, மோடி அரசுக்கு எதிராக முழக் கங்களை எழுப்பினர். சிவசேனா மற்றும் என்சிபி உறுப்பினர்களும் இப்போராட்டத் தில் கலந்து கொண்டனர். தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்களும் அவை யின் மையப்பகுதியில் நின்று, பதாகை களை ஏந்தியபடி கலந்து கொண்டனர். அவர்கள் தெலுங்கானாவில் நெல் கொள் முதல் தொடர்பான பிரச்சனையையும் எழுப்பினர். தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால், அவையை 12 மணி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். ஆனால், நண்பகலில் அவை  கூடியபோதும் எதிர்க்கட்சிகள் விடாப்பிடி யாக தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்த னர். அப்போது அவைக்குத் தலைமை தாங்கிய பாஜக உறுப்பினர் ராஜேந்திர அகர்வால் பூஜ்ஜிய நேரத்தை எடுத்துக் கொண்டது, எதிர்க்கட்சி உறுப்பினர்களை மீண்டும் ஆவேசம் கொள்ளச் செய்தது. அவர்கள் அவையின் மையப்பகுதியில் அமர்ந்து எரிபொருள் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அகர்வால் மக்க ளவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.