states

img

இமாச்சலப்பிரதேசத்தில் சீத்தாராம் யெச்சூரி பிரச்சாரம்

இமாச்சலப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 12 அன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் கட்சியின் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிருந்தா காரத், சுபாஷினி அலி உள்ளிட்டோர் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். சிம்லா நகர்ப்புற சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் திகேந்தர் சிங் பன்வாரை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக அவருடன் வேட்பாளர் மற்றும் தலைவர்கள் கைகளை உயர்த்தி நின்ற காட்சி. (செய்தி : 3)