states

img

எய்ம்ஸ்: மோடியின் மோசடி

புதுதில்லி, மார்ச் 16- எய்ம்ஸ் மருத்துவமனை விவகா ரத்தில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறை யில் தவறான தகவல்களை பரப்புகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13  அன்று கர்நாடகாவின் மாண்டியா  மாவட்டத்தில் தனது உரையில், “எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை எனது அரசாங்கம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது” என்று  கூறினார். அதற்கு அடுத்த நாள் (மார்ச் 14) ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக்  மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத் தில்,”மோடியின் சகாப்தத்தால் எய்ம்ஸ்  நிறுவனங்கள் 7-லிருந்து 22 ஆக உயர்ந்துள்ளன” என பதிவிட்டுள்ளார்.

அன்றும்.. இன்றும்... பல்டி...

முன்னதாக, பிப்ரவரி 3, 2023 அன்று  இதே சுகாதார அமைச்சர் மன்  சுக் மாண்டவியா மக்களவை யில்,”பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்சா யோஜனாவின் (PMSSY) கீழ்  2014-ஆம் ஆண்டு முதல் 16 எய்ம்ஸ்  மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு தல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 16  எய்ம்ஸ்-ஸில் வரையறுக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு (OPD) மற்றும் உள்நோயாளிகள் துறை (IPD) சேவை கள் மட்டுமே உள்ளன” எனக் கூறி னார்.  2014-ஆம் ஆண்டு பிறகு ஒரு  எய்ம்ஸ் கூட இன்றுவரை முழுமையாக செயல்படவில்லை என்பது தான் அவ ரது கூற்றின் சாராம்சம். நாடாளுமன்றத் தில் ஒன்றும், மோடியின் கருத்திற்கு ஒன்றும் என இருவேறு கருத்துக்களை தெரிவித்து எய்ம்ஸ் விவகாரத்தில் பல்டி அடித்து வருகிறார் ஒன்றிய சுகா தார அமைச்சர் மன்சுக் மாண்டவியா. எல்லாமே ஓபிடி, ஐபிடி  2014-ஆம் ஆண்டில் அறிவிக்கப் பட்ட கோரக்பூர் (உத்தரப்பிரதேசம்), மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம்),  நாக்  பூர் (மகாராஷ்டிரா) மற்றும் கல்யாணி (மேற்குவங்கம்) ஆகிய எய்ம்ஸ் மருத் துவமனைகள் அனைத்தும் தற்போது வரையறுக்கப்பட்ட ஓபிடி (OPD) மற்றும் ஐபிடி (IPD) சேவைகளை மட்டுமே வழங்குகின்றன. அதாவது  மேற்கூறப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ மனைகள் தில்லி எய்ம்ஸ் போன்று முழு மையாக செயல்படும் பட்டியலில் இல்லை என்பதாகும்.

ஓபிடி மற்றும் ஐபிடி சேவைகள் கிடைப்பதன் அர்த்தம் என்ன என்பதை ஒன்றிய அரசாங்கம் இதுவரை முழு மையாக வரையறுத்துக் கூறவில்லை என்றாலும், இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் கவுரவப் பேராசி ரியர் கே. ஸ்ரீநாத் ரெட்டி அதனை விளக்கி யுள்ளார். முழுமையான செயல்பாட்டு ஓபிடி (OPD) என்பது அனைத்து துறை களையும் குறிக்கும். வரையறுக்கப் பட்ட ஐபிடி (IPD) சேவைகள் மாவட்ட அளவிலான மருத்துவமனைகள் வழங்குவதற்கு இணையாக அல்லது  குறைவாக சில அடிப்படை சேவை களை மட்டுமே வழங்கும். ஒன்றிய அமைச்சர் குறிப்பிடும் ஓபிடி மற்றும் ஐபிடி சேவைகள் நிலை என்ன என்பதை முழுமையாக தெளிவுபடுத்த உண்மை யில் மருத்துவமனைக்கு வந்த நோயா ளிகளின் எண்ணிக்கையை கொடுக்க வேண்டும். அதன்பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் முழுமையான செயல்பாட்டு நிலவரம் தெரியவரும் எனக் கூறியுள்ளார்.

செயல்படாத மருத்துவமனைக்கு ஆண்டுவிழா கொண்டாட்டம்

அசாம் மாநிலத்தின் முக்கிய நக ரான கவுகாத்தியில் கடந்த 2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்து வமனைக்கான அடிக்கல்லை நாட்டி னார். ஆனால் எய்ம்ஸ் நிறுவனத்தின் வலைத்தள தகவல்படி ஓபிடி மற்றும்  ஐபிடி சேவைகள் எதுவும் வழங்கப்பட வில்லை. உண்மையில்,”ஒரு மருத்து வப் பிரிவு கூட இயங்கவில்லை” என்று  கவுகாத்தி எய்ம்ஸ் மருத்துவமனை இணையதளம் கூறுகிறது. இதில் நகை முரண் என்னவென்றால் செயல்படாத மருத்துவமனைக்கு 3-வது ஆண்டு விழா கொண்டாடியுள்ளன ஒன்றிய, அசாம் மாநில பாஜக அரசுகள். விமர்ச னங்கள் அதிகம் எழவே, 2023-ஆம் ஆண்டு செயல்படும் வகையில் கவு காத்தி எய்ம்ஸ் நிறுவனம் முறையாக திறக்கப்படும் என்று கூறி அசாம் பாஜக  முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா சமா ளித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்,  முழுமையான பணி முடித்தல், பணி  முடிந்த மருத்துவமனைகள் செயல்படா மல் வெற்று இடமாக இருப்பது என - மோடி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகளின் செயல்  பாடு தொடர்பாக இப்படி பல்வேறு  சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி டுவிட்டர் பக்கத்தில்,”பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தவறான தக வல்களை பரப்புகிறார். தேர்தல் நடக்க விருக்கும் கர்நாடகாவில் எய்ம்ஸ்  மருத்துவமனைகளின் எண்ணிக்கை யை 3 மடங்கு (7 முதல் 22 வரை) அதி கரிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை அறி விக்கப்பட்ட 16இல் எதுவும் முழுமை யாக செயல்படவில்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மக்களவை யில் கூறியிருந்தார்” என்பதை சுட்டிக் காட்டி குற்றம் சாட்டியுள்ளார்.