புதுதில்லி, ஏப். 2 - பிரதமர் நரேந்திர மோடியின கல்வித் தகுதி பற்றி கூடவா நாட்டுமக்கள் அறிந்து கொள்ளக் கூடாது; இதனைக் கேட்டதற்காக ரூ. 25 ஆயிரம் அபராத மும் விதிப்பார்களா? என்று தில்லி முதல்வர கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி யுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதுதொடர்பான விவரங்களை வழங்கு மாறு, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2016-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI) விண்ணப்பித்தார். குஜராத் பல்கலைக்கழகத்தில் 1978-ஆம் ஆண்டு பி.ஏ. படித்த அனைத்து மாண வர்களின் தேர்வு முடிவுகளையும் அவர்களின் பெயர் விவரங்களை வழங்குமாறு கேட்டிருந்தார். அதற்கு பதில் கிடைக்காத நிலை யில், மத்திய தகவல் ஆணையத்தின் (CIC) தலைவர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யலுவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதினார். அதில், “என்னைப் பற்றிய அரசு ஆவணங்கள் எதையும் பொது வெளியில் வெளியிட எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் ஆணை யம் ஏன் மோடியின் கல்வித் தகுதியை மட்டும் வெளியிடாமல் மறைக்கிறது” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து, பிரதமர் மோடி யின் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு சான்றிதழ் விவரங்களை வழங்குமாறு, பிரதமர் அலுவலகத்தின் தகவல் தொடர்பு அதிகாரி, குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களின் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கு மத்தியத் தகவல் ஆணையர் உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து, குஜராத் பல்கலைக்கழகம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், மூன்று மாதங்களுக்குப் பின்னர் குஜராத் உயர் நீதிமன்றம் சிஐசி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்ற போது, குஜராத் பல்கலை சார்பில் ஆஜரான ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “யாரோ ஒருவரின் பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்பு எல்லாம் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பொதுநலன் சார்ந்ததாக ஏற்றுக் கொள்ள முடியாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது இந்த வழக்கில் 2023 மார்ச் 31 அன்று தீர்ப்பு வழக்கிய குஜராத் உயர் நீதிமன்ற தனி நீதிபதி பைரன் வைஷ்ணவ், பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்த விவரங்களை வழங்கு வதற்கான தலைமைத் தகவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்தார். அத்துடன், பிரதமர் மோடி யின் கல்விச் சான்றிதழ் விவரங்களை பிரதமர் அலுவலகம், குஜராத் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்கள் வழங்கத் தேவையில்லை எனவும், பிரதமர் மோடி யின் கல்விச் சான்றிதழ் விவரங்களை கேட்டதற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ. 25 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பிரதமர் தனது கல்வி குறித்த சான்றி தழ்களை காட்டாததற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, அவரது ஈகோ. தன்னுடைய கல்விச் சான்றிதழை யாரிடமும் காண்பிக்க வேண்டிய தேவையில்லை என்று அவர் நினைக்கலாம். ஆனால், ஜனநாயகத்தில் இத்தகைய நடைமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டாவது காரணம், அந்த பட்டப் படிப்பு போலியானதாக இருக்க வேண்டும்” என்று தெரி வித்துள்ளார். மேலும், “நம் நாட்டின் பிரதமர் என்ன படித்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளக் கூடவா நமக்கு உரிமையில்லை. நீதிமன்றத்தில் கல்விச் சான்றிதழ்களை காட்ட மறுப்ப தை எதிர்க்கிறேன். சான்றிதழைக் கேட்டதற்காக எனக்கு அபராதம் வேறு விதிக்கப்பட்டுள்ளது. இங்கே என்ன நடக்கிறது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ள கெஜ்ரிவால், “கல்வி யறிவற்ற அல்லது குறைந்த கல்வித் தகுதியுடைய பிரதமர் நாட்டிற்கே ஆபத்து” என்றும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக தில்லி பல்கலைக்கழ கமும், 2017-ஆம் ஆண்டு தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த நீதிமன்றமோ, 7 ஆண்டுகள் எல்லாம் வழக்கு நடத்தாமல், முதல் விசாரணையிலேயே, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விட்டது குறிப்பிடத்தக்கது.