states

img

கண்ணியமிக்க ஜனாதிபதி காட்டுக் களவாணி நிகழ்ச்சிக்கு வரக்கூடாது

அம்மா வணக்கம்! நான் கோவை மாவட்டம், வெள்ளி யங்கிரி மலைக்கு அரு கிலுள்ள கிராமத்தில் வாழ்ந்து வரும் ஆதி வாசி மக்களில் ஒருவர். பழங்குடியினத்திலிருந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராக தாங்கள் தேர்ந் தெடுக்கப்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. உங்களின் பதவிக் காலத்தில் ஒட்டுமெத்த நாட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அதேநேரத்தில் நாடு  முழுவதுமுள்ள 10 கோடிக்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் கூடுதல் எதிர்பார்ப்புகளு டன் உள்ளனர் என்பதை தாங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சரி! இப்ப இந்த கடிதாசி எதற்கு என்ற விஷயத்திற்கு வருகிறேன். குடியரசுத் தலைவராக பதவியேற்று முதன் முதலில்  தாங்கள் தமிழ்நாட்டிற்கு வர இருப்ப தாக பத்திரிகை வாயிலாக தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாட்டு  மக்களின் சார்பில் எங்களது வரவேற்பினை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் வருகை யின் போது, தாங்கள் மதுரை மீனாட்சி அம்மன்  கோவிலுக்கு செல்ல இருப்பதாக அறிந்தேன். அவரவர் மத நம்பிக்கையின் அடிப்படையில் வழிபடுவதும், வழிபாட்டு இடங்களுக்கு செல்வதும் அவரவர் உரிமை. 

தாங்கள் ஏன் செல்ல வேண்டும்?

அந்த அடிப்படையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு தாங்கள் செல்வது உங்களது உரிமை. ஆனால், அதற்கடுத்து தாங்கள்  ஈஷா யோகா மையத்திற்கு செல்ல இருப்ப தாகவும், மஹா சிவராத்திரி விழாவில் தாங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி உண்மையாக இருக்கக்கூடாது என்றே நான் விரும்புகிறேன். ஜக்கி வாசுதேவ் என்கிற ஒரு தனி மனிதன் ஆன்மீகப் போர்வையில் நடத்து கிற ஈஷா யோகா மையம் என்ற பெயரில்  செயல்படும் ஒரு கார்ப்பரேட் நிறு வனத்திற்கு எனது நாட்டின் குடியரசுத் தலைவர் எதற்காக செல்ல வேண்டும்? இதன் மூலம் தாங்கள் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி என்ன?  அந்த மனிதன் நடத்தும் நிறுவனத்தில் யோகா பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண்மணி சமீபத்தில் மர்மமான முறையில் இறந்து தாங்கள் செல்ல இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அந்த மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இந்தியாவின் முதல் குடிமகள் அங்கே செல்வது, வழக்கு விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தாதா? என்பதை தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பழங்குடியினரைப் பற்றி  நன்றாக அறிவீர்கள்

மேலும் பழங்குடி மக்களுக்கு சொந்த மான நிலங்களை ஈஷா யோகா மையம் அபகரித்துக் கொண்டது தொடர்பான வழக்கும் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. பழங்குடியினர்க்கு நிலம் எவ்வளவு முக்கியமானது என்பதை பழங்குடியினத்தவராகிய நீங்கள் மற்றவர்களை விட மிக அதிகமாகவே உணர்ந்திருப்பீர்கள். நிலத்தை இழந்த  நாங்கள் கூலிக்காரர்களாக மாறி அன்றா டம் உயிர் வாழ்வதற்கே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அது மட்டுமல்லாமல், வனவிலங்குகள் நடமாடும் இடங்களையெல்லாம் வளைத்து பிரம்மாண்டமான கட்டடங்களை எழுப்பி வனவிலங்குகளின் வாழ்விடத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை இந்த நிறு வனம் ஏற்படுத்தியுள்ளதை அனைவரும் அறிவர்.  வனப்பகுதிகளில் அரசின் விதிமுறை களுக்கு மாறாக, பல லட்சம் சதுர அடியில் கட்டடங்களை எழுப்பி அது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளன. மத  நம்பிக்கையுள்ள நீதிபதிகள், அதிகாரி களை பயன்படுத்தி வழக்குகளை இழுத்த டித்தும், தண்டனையிலிருந்து தப்பித்தும் கொண்டுள்ள நபர்தான் இந்த ஜக்கி வாசு தேவ். பல்வேறு கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள ஆசாமி நடத்தும் நிகழ்வில் குடியரசுத் தலைவர் பங்கேற் பது பொருத்தமல்ல. அப்படியொரு நிகழ்வு நடைபெற்றால், நாட்டின் உயர் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு இருக்கும் வரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்த சட்டமும் நம்மை எதுவும் செய்ய முடி யாது என்ற தைரியம் வருமே தவிர சட்டத்து க்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டு மென்ற எண்ணமே ஏற்படாது. எனவே, கண்ணியமிக்க பதவியில் உள்ள தாங்கள் அரசியல் சாசனத்தை மதித்து நடக்க வேண்டியதன் அவசியத்தை நன்றாக அறிவீர்கள்.

மோடிக்கு வந்த அவப்பெயர்தான் தங்களுக்கும்

தங்களுக்குள்ள பல்வேறு புலனாய்வு அமைப்புகள் மூலம், இந்த ஈஷா யோகா மையத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும், அதன் மர்மம் நிறைந்த செயல் பாடுகள் குறித்தும் விசாரித்து அறிந்து கொண்டு இந்த இடத்திற்கு வருவதா, வேண் டாமா? என்பதை முடிவு செய்யுங்கள். தங்கள் வருகை ரத்து செய்யப்படுமானால், மதத்தின் பெயரால் எல்லோரையும் வளைத்துவிட முடியாது என்ற செய்தி யை அழுத்தமாக நாட்டு மக்களுக்கு தெரி விப்பதாக அமையும். அந்நிறுவனத்தின் மீதான புகார்கள் குறித்தும் அச்சமின்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொள் வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாக  பிரதமர் மோடி அவர்கள் இங்கு வந்து  சென்றார். மக்கள் என்ன பேசிக்கொண்டார் கள் தெரியுங்களா? நாட்டின் பிரதமரே இவ ருடைய தாடிக்குள் இருக்கிறார். ஜக்கி வாசு தேவின் தாடி மயிரைக் கூட எவராலும் தொட முடியாது என்று! இப்போது தாங்கள் வந்தால் உங்களுக்கும் அத்தகைய அவப் பெயர்தான் ஏற்படும். எனது நாட்டின் குடியரசுத் தலைவ ருக்கு அப்படியொரு அவப் பெயர் வந்து விடக் கூடாது என்ற ஆதங்கத்திலும் மதச்சார் பற்ற நாட்டின் குடியரசுத் தலைவர் ஒரு மதச்சார்பான விழாவில் கலந்து கொள்வது மற்ற மதத்தை பின்பற்றும் மக்களிடையே பாரபட்சமான உணர்வுகளை ஏற்படுத்துவ தாக அமையும் என்பதையும் தங்கள் கவ னத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே, ஈஷா யோகா மையம், செல்லும் தங்களின் பயணத்தை ரத்து செய்யுங்கள் என்பதே தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக, பழங்குடி மக்களின் வேண்டுகோள், மீண்டும் ஒரு முறை குடியரசு தலைவருக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.