கேரளா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரி வளாகங்களில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில், தேர்தல் நடத்தப்பட்ட 77 வளாகங்களில் 64 இல் எஸ்எப்ஐ வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில், 36 அமைப்புத் தேர்தல்களில் 31 கல்லூரி களில் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. இக்பால் கல்லூரி, ஏஜே கல்லூரி ஆகி யவை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீசங்கரா கல்லூரி ஆகியவை கேஎஸ்யூ விடம் இருந்து எஸ்எப்ஐ மீண்டும் கைப் பற்றியது. கொல்லம் மாவட்டத்தில் நடை பெற்ற 19 கல்லூரி தேர்தல்களில் 13 கல்லூ ரிகளில் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. எஸ்.என்.கல்லூரி கொல்லம், கொல்லம் எஸ்என் மகளிர் கல்லூரி, எஸ்.என்.சட்டக் கல்லூரி கொல்லம், எஸ்.என்.கல்லூரி சாத்தன்னூர், என்எஸ்எஸ் கல்லூரி நிலமேல், டிகேஎம் கல்லூரி கரிக்கோடு, பத்தனாபுரம் செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, ஏகேஎம்எஸ் கல்லூரி பத்தனாபுரம், பிஎம்எஸ்ஏ கடகால், ஐஎச்ஆர்டி குந்தேரா, புனலூர் ஸ்ரீ நாராயணா தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் அனைத்து இடங்களையும் எஸ்எப்ஐ கைப்பற்றியது. ஆலப்புழா மாவட்டத்தில் 17இல் 15 கல்லூரிகளில் எஸ்எப்ஐ அமோக வெற்றி பெற்றது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் தேர்தல் நடைபெற்ற 5 கல்லூரிகளில் அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. பொய்யர்களை வீழ்த்த எஸ்எப்ஐ உடன் இணைந்த கேரள பல்கலைக் கழக மாணவர்களை எஸ்எப்ஐ மாநில தலைவர் கே.அனுஸ்ரீ, செயலாளர் பி.எம்.ஆர்ஷோ ஆகியோர் வாழ்த்தினர்.