states

img

வடகிழக்கு மாநில வனங்களைச் சூறையாட பாஜக அரசு சூழ்ச்சி

இம்பால், ஜுன் 7 - மணிப்பூர் கலவரபூமியாக மாறி யுள்ளது. மெய்ட்டி - குக்கி இன மக்க ளிடையேயான மோதலால் மணிப் பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.  இத்தகைய சூழலிலும் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் வனநிலங்களைக் கைப்பற்றும் கார்ப்பரேட் - பாஜக கள்ளக் கூட்டணியின் சூழ்ச்சித் திட்டங்கள் தீவிரம் பெற்றுள்ளன.  மார்ச் மாதம் சில பகுதிகளில் குக்கி பழங்குடியின மக்களை ‘பாது காக்கப்பட்ட வனப்பகுதி’ என கூறி  அவர்களின் வாழ்விடத்தில் இருந்து  மணிப்பூர் பாஜக அரசு வெளி யேற்றியது. இதன் பின்னணியில் வனப்பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா 2023 மற்றும் வடகிழக்கு மாநி லங்களில் வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் பாரம்பரிய விவசாயத்தில் பயிரிட தகுதியற்ற பாமாயில் எண் ணெய் வித்துக்களை பயிரிட அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட வை உள்ளன. 

வனப்பாதுகாப்பு சட்டம் 1980ஐ  நீர்த்துப் போகச் செய்ய வனப்பாது காப்பு சட்டத்திருத்த மசோதா 2023ஐ  ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இச்சட்ட மசோதா வனப்பகுதிகளை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்ய வழிவகை செய்வதோடு பழங்குடி மக்களின் நிலம் மற்றும் வளங்கள் மீதான உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. குக்கி பழங்குடியின மக்கள் திட்ட மிட்டு வெளியேற்றப்பட்டது. இச் சட்ட த்தை அமலாக்கும் போது மக்க ளின் எதிர்வினை எப்படி இருக்கும்  என்பதை சோதிக்கும் நடவடிக்கை யாக பார்க்கப்படுகிறது. இந்த வெளி யேற்றத்தினால் மக்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். அச்சமயத்தில் மணிப் பூர் பாஜக அரசின் பெரும்பான்மை வெறியால் மெய்ட்டி இன மக்க ளுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையிலான பெரும் கலவரம் தூண்டப்பட்டது.இந்த கலவரத்தை உடனே கட்டுப்படுத்தாமல் காலம் தாழ்த்திய பாஜக அரசு, அதன்பிறகு கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நின்ற  வேளையிலும் வட கிழக்கு மாநிலங்களுக்கு உரிய சிறப்பு அரசியல் பாதுகாப்புகளை சிதைக்கும் வேலைகளை பாஜக அரசு செய்து கொண்டு இருந்தது. மணிப்பூரில் உருவான இன மோதலை கட்டுப்படுத்தாமல் காலம் தாழ்த்தியது, வனப்பாதுகாப்பு சட்ட திருத்தம் 2023, வடகிழக்கு மாநிலங்களின் சிறப்பு அந்தஸ்தை சிதைப்பது, மற்றும் பாமாயில் தயாரிப்புக்கான பனை விதைப்பு செய்ய அழுத்தம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் அனை த்திற்கும் பின்னே ஒட்டுமொத்த வட மாநிலங்களின் வளத்தையும் கார்ப்பரேட்டுகள் கையில் கொடுக்கும் பாஜக அரசின் சூழ்ச்சி உள்ளது.

கார்ப்பரேட்களுக்கான திட்டம் 

பல்லுயிர் தன்மை மிகுந்த வட கிழக்கு மாநிலங்களில் பாமாயில் உற்பத்திக்கான பனை தாவரங்களை அதிகளவு நடவு செய்வது இயற்கை வளத்திற்கும் விவசாயிகளுக்கும்  அதீத பாதிப்புகளையே உரு வாக்கும். வளமான நிலத்தை வள மற்றதாக மாற்றிவிடும். ஆனால் அத்தாவரத்தை நடவு செய்ய மானி யங்கள் வழங்குவது, நடவிற்கு இலவசக் கன்றுகளை வழங்குவது, விளை பொருளை சந்தைப்படுத்த கட்டமைப்புகள் மேம்படுத்தப் படும் போன்ற வாக்குறுதிகளை மாநில அரசுகள் கொடுத்து வருகின்றன. சில வடகிழக்கு மாநிலங்கள் இதற்காக பதஞ்சலி, கோத்ரெஜ் உள்ளிட்ட கார்ப்பரேட்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் போட்டுள்ளன.

பாதிப்புகள்

இந்த சட்ட திருத்தத்தின்படி வனப்பகுதிகளை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.வனப் பகுதியில் பயணம் செல்லுதல் உள்ளிட்ட சுற்றுலா தள செயல்படு களாக மாற்றிக்கொள்ள கார்ப்ப ரேட்டுகளுக்கு இச்சட்டம் வழிவகை செய்கிறது. பாமாயில் உற்பத்திக்கான பனை ரகத்திற்கு நாளொன்றுக்கு 250 முதல் 300 லிட்டர் தண்ணீர் தேவைப் படுகிறது.மேலும் இத்தாவரத்திற்கு அளிக்கப்படும் அதிக செயற்கை உரம் மண்ணில் உள்ள இயற்கை யான சத்துக்களை அழித்து மலட்டுத்தன்மை உடையதாக மாற்றி விடுகிறது. வேறு பயிர்கள் எதை யும் நடவு செய்ய முடியாத வகையில் நிலத்தை நாசம் செய்துவிடுகிறது.மாநிலத்தின் உணவுப்பொருட்களின் உற்பத்தியையும் பாதிக்கிறது. எனவே மறுநடவில் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார்கள்.பலர் தமது நிலத்தையே விற்பனை செய்து விடும் சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

இந்த விவசாயத்தி னால் இந்தோனேசியா பப்புவா நியூ  கினியா உள்ளிட்ட நாடுகளில் கார்ப்ப ரேட்டுகளால் அதிக விவசாயிகள் பாதிக்கப்பட்டு தமது விவசாய நிலத்தை இழந்துள்ளனர். இது  இந்தியாவின் வடகிழக்கு மாநி லங்களில் உள்ள நிலம் உடைய பூர்வகுடி மக்களை நிலமற்ற கூலித் தொழிலாளர்களாக மாற்றிவிடும். மிசோரம் மாநிலத்தில் 2004 முதல் இந்த தாவரம் பயிரிடப்பட்டது. இத் தாவரத்தை பயிரிட வைக்க பணப்பலன் களை  கூறி ஆசை காட்டிய அரசு  நிறுவனங்கள் அதன் பின்விளைவு களை கூறாமல் மறைத்து விட்டன.இதனால் அம்மாநிலத்தின் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளை பெருமளவு பாதித்து அவர்களை நிலமற்றவர்களாக மாற்றி நிலை குலைய செய்தது.  அந்த அனுபவங்களை எல்லாம்  கணக்கில் எடுக்காமல் கார்ப்பரேட்டு களின் லாப நோக்கத்தை மட்டும் கணக்கில் வைத்துக்கொண்டு பாஜக அரசு இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வட கிழக்கு மாநிலங்களின் வளங்களை கார்ப்பரேட்களின் கையில் ஒப்படைத்துவிட தீவிரமாக செயல்படுகிறது.