states

சபரிமலை பெண்கள், குழந்தைகளுக்கு இன்று முதல் தனி வரிசை

திருவனந்தபுரம், டிச.18-  சபரிமலை ஐயப்பன் கோவி லில் ஆன்லைன் முன்பதிவு மற்  றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனு மதிக்கப்பட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் கூட்டம் அதி கரித்தே வருகிறது. தினமும் சரா சரியாக 80 ஆயிரத்துக்கும் மேற்  பட்ட பக்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றனர்.  இதனால் சபரிமலையில் பக்தர்கள், நீண்ட நேரம் காத்தி ருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தரிசன நேரத்தை திருவதாங்கூர் தேவசம் போர்டு அதிகரித்தது. இருப்பினும் காத்திருப்பு நேரம் குறைந்தபாடில்லை. சில நேரங்  களில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் கள், குழந்தைகள், முதியவர்கள் மயக்கம் அடையும் நிலையும் உருவானது.  இந்நிலையில், பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு தரிசனத்தில் சிறப்பு சலுகை அளிக்க தேவசம் போர்டுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற 3 அமைச்சர் கள் தலைமையிலான ஆலோ சனை கூட்டத்தில் இதுபற்றி ஆலோ சிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த் சபரிமலையில் ஆய்வு செய்தார். மேலும் பக்தர்களின் பாது காப்புக்காக சபரிமலையில் மத்  திய ரிசர்வ் பட்டாலியன் காவல்  துறையினர் ஞாயிறன்று முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட னர்.  மேலும் திங்களன்று (டிச.19) முதல் குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் மற்றும் முதி யோர்களுக்கான சிறப்பு தனி வரிசை செயல்படும் என தேவ சம் போர்டு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.