states

img

கேரளத்தை ஆளுநர் அவமதிப்பது சங்பரிவாரின் ரகசிய உத்தி

புதுதில்லி, அக்.28- பச்சைப் பொய்கள், வகுப்புவாதம், வெறுப்புப் பேச்சுகளால் தனக்கு காலூன்ற இடமளிக்காத கேரளாவை தொடர்ந்து விமர்சிப்பது சங்பரிவாரின் ரகசிய உத்தி. 2016-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவின் நிலைமை சோமாலியாவை விட மோச மாக இருப்பதாக குற்றம்சாட்டி முதல் தாக்குதலை நடத்தினார். ஒன்றிய அமைச்சராக இருந்த மேனகா காந்தி, மலப்புரம் மாவட்டத்தை இழிவாகப் பேசினார். கடந்த செப்டம்பரில் திருவனந்த புரம் சென்ற பாஜக தேசியத் தலை வர் ஜேபி நட்டா, கேரளாவை பயங்கர வாதிகளின் மையம் என்று குற்றம் சாட்டினார். பாஜகவின் கோழிக்கோடு பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையில், இ.ஜ.முன்னணி அரசு ‘இஸ்லாமிய பயங்கரவாதத்தை’ ஊக்குவிப்பதாகக் குறிப்பிட்டார்.

மறுபுறம், ஆர்எஸ்எஸ் பதிப்பகமான பாஞ்சஜன்யா, கேரளாவை மோச மாக சித்தரித்து மேலும் கட்டுரை களை எழுதியது. சங்பரிவார் அமைப்பு களும் சமூக ஊடகங்கள் மூலம் கேரளா வைப் பற்றி மிக மோசமான பிரச்சார த்தை திட்டமிட்டு மேற்கொள்கின்றன. இதன் மூலம் பல ஆதாரமற்ற பொய்கள் பரப்பப்படுகின்றன. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பாஜகவினர் நாடாளுமன்றத்தில் கூட கேரளாவைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார்கள். உத்தரப்பிரதேச சட்ட சபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, கேரளாவை அவமதிக்கும் வகையில், தேவையில்லாமல், முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்தார். இதையெல்லாம் ஏற்று, அல்லது  அதீதமாக ஆர்.எஸ்.எஸ் விசுவாசத்தை காட்ட ஒரு வாய்ப்பாக இதை ஒரு படி மேலே எடுத்துக்கொண்டு, ஆளுநர் ஆரிப் முகமது கான் அதே முறை யைப் பின்பற்றுகிறார். சாராயமும் லாட்டரியும் கேரளா வின் முக்கிய வருமானம் என்ற ஆளு நரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஒரு  உதாரணம் மட்டுமே. இந்த நிலை யில்தான் கேரளாவில் அமைச்சர் களுக்கு கல்வித் தகுதி இல்லை என்று ஆளுநரின் விசித்திரக் குற்றச்சாட்டு. நிதி ஆயோக், உள்துறை அமைச்சகம், குடும்ப நல அமைச்சகம் மற்றும் பதிவாளர் ஜெனரல் ஆகியவற்றின் அனைத்து அறிக்கைகளிலும் கேரளா நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என்பது இவர்களது கண்களுக்கு புலப்படுவதே இல்லை.