புதுதில்லி, அக்.1- தாஜ்மகாலை ஷாஜகான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி, ரஜ்னீஷ் சிங் என்பவர் தற்போது உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். தாஜ்மகாலை மும்தாஜ் நினைவாக ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கான அறி வியல்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும்; எனவே, இதுதொடர்பாக உண்மை கண்டறியும் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்தி ருந்தார். ஆனால், அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து ரஜ்னீஷ் தற்போது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். தாஜ்மஹாலின் உண்மைத் தன்மை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்டால், இந்திய தொல்லியல் துறை சரியானப் பதில்களை வழங்கவில்லை என்றும் தனது மனுவில் ரஜ்னீஷ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். தாஜ்மஹாலுக்குள் இருக்கும் 22 ரகசிய அறை களை திறந்து ஆய்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு வில் ரஜ்னீஷ் சிங் வலியுறுத்தி இருந்தார். ஆனால், அந்தக் கோ ரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் ரஜ்னீஷ் சிங் எழுப்பவில்லை.