states

img

கிலோவுக்கு ரூ.300 குறைந்தபட்ச விலை கேட்டு 2 நாள் தொடர் போராட்டம் தொடங்கியது

திருவனந்தபுரம்,மே 25- ரப்பர் விவசாயிகளை நசுக்கும் ஒன்றிய அரசின் போக்கை கண்டித்தும், ஒன்றிய அரசு கிலோவுக்கு ரூ.300 ஆதார விலையாக உயர்த்த வலியுறுத்தியும் கேரள விவசாயிகள் சங்கம் சார்பில் திருவனந்தபுரம் ராஜ் பவன் (ஆளுநர் மாளிகை) முன்பு விவசாயிகளின் சத்தி யாகிரகப் போராட்டம் வியா ழனன்று தொடங்கியது.  வெள்ளியன்று (மே 26) 10,000 விவசாயிகள் திரளும் ராஜ்பவன் அணிவகுப்பும் நடைபெறுகிறது. முன்னதாக மாநிலம் முழுவதும் 14 மாவட்டங்களி லும் மலையோர பகுதி களில் நடைபயணம் நடை பெற்றது. தேர்வு செய்யப் பட்ட ஆயிரம் ரப்பர் விவசாயி களின் இரவு-பகல் சத்தியா கிரகத்தை அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் விஜு கிருஷ் ணன் துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் வல்சன் பனோளி தலைமை வகித் தார்.   விவசாயிகளின் போ ராட்டத்தின் ஒருபகுதியாக வெள்ளியன்று நடக்கும் பேரணியை சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர். அசோக் தாவ்லே துவக்கி வைக்க உள்ளார். ரப்பருக்கு ரூ.300 குறைந்தபட்ச விலை நிர்ண யம் செய்து ஒன்றிய அரசே கொள்முதல் செய்தல், நிதி ஆயோக் முடிவை மறு ஆய்வு செய்தல், ரப்பர் சார்ந்த தொழில் திட்டங்களு க்கு ஒன்றிய அரசின் நிதி யுதவி, ரப்பரை விவசாயப் பயிராக அங்கீகரித்தல் போன்ற கோரிக்கைகளை ரப்பர் விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர்.

புதனன்று காட்டாக்கடையில் நடந்த நடைபயண நிறைவுக் கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டச் செயலர் வி.ஜாய் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நடை பயணக்குழு தலைவர் வி.எஸ்.பத்மகுமார், மேலாளர் ஹரிஹரன் பிள்ளை, மாவட்டச் செயலர் கே.சி.விக்ரமன், பி.எஸ்.பிரசாந்த், ஆர்.ஜெயதேவன், பி.பாலச்சந்திரன், வி.விஜூமோகன், என்.சவுக்கத்தலி உள்ளிட்டோர் பேசினர்.