புதுதில்லி, டிச. 24 - தற்போதைய நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் பலவீன மாக உள்ளதாக ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள் கைக் குழு (Monetary Policy Committee -MPC) உறுப்பினரும், அகமதாபாத் ஐஐஎம் கல்வி நிறுவன பேராசிரியருமான ஜெயந்த் ஆர். வர்மா தெரிவித்துள்ளார். “ஏற்றுமதி, அரசு செலவுகள், முதலீடு மற்றும் தனியார் நுகர்வு ஆகியவற்றை பொரு ளாதார வளர்ச்சியை இயக்கும் நான்கு என்ஜின் கள் என்கிறோம். இவற்றில், ஏற்றுமதியைப் பொறுத்தவரை உலகளாவிய மந்தநிலை காரணமாக அதனை அதிகரிக்க முடியாத நிலை உள்ளது. அடுத்ததாக அரசு செல வினம் பல்வேறு காரணங்களால் கட்டுப் படுத்தப்படுகிறது. இந்நிலையில், தனியார் நுகர்வு வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதே முக்கியமான கேள்வியாக உள்ளது. அந்த வகையில், பொருளாதார வளர்ச்சி தற்போது மிகவும் பலவீனமாக உள்ளது. எனவே, நமது பொருளாதாரத்தைக் காக்க நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று ஜெயந்த் ஆர். வர்மா கூறியுள்ளார். மேலும், “ஏற்கெனவே கொரோனாவால் இரண்டு ஆண்டுகளை நாம் இழந்து விட்ட தால், பெரிய வளர்ச்சியை அனைவரும் எதிர் பார்க்கிறார்கள். இந்தியாவில் வேலையில் சேரும் இளைஞர்களுக்கு அதிக வளர்ச்சி தேவை. அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இது முக்கியப் பிரச்சனையாகும். 10 மாதங்களாக ரிசர்வ் வங்கியால் இலக் கிற்குள் பணவீக்கத்தை வைத்துக் கொள்ள முடியவில்லை. கொரோனா போன்ற பெருந் தொற்றுக்கள் நூற்றாண்டிற்கு ஒரு முறை ஏற்படுவது. எனவே, இதைத் தவிர்க்க முடி யாது. கொரோனா பெருந்தொற்று உயிரிழப்பு களை ஏற்படுத்தியது மட்டுமின்றி பொருளா தார பேரழிவையும் ஏற்படுத்தியது. 2022-இல் நாம் பார்ப்பதும் கூட அந்தக் காலகட்டத்தின் செயலற்ற தன்மையின் விளைவே ஆகும். இருப்பினும், இந்த தாமதம் கூட இந்த ஆண்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை. உக்ரைன் போரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவ வில்லை” என்றும் ஜெயந்த் ஆர். வர்மா குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சில்லரைப் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவிகிதத்திற்குள் வைத்துக் கொள்ள வேண்டியது ரிசர்வ் வங்கியின் பொறுப்பா கும். இருப்பினும், நவம்பர் மாதத்திற்கு முன்பு வரை கடந்த 10 மாதங்களாகப் பணவீக்கம் 6 சதவிகிதத்திற்கும் அதிகமாகவே இருந்தது. இப்போதுதான் அது இலக்குக்குள் வந்துள்ளது. இதனிடையே, கடந்த 3 காலாண்டு களாகப் பணவீக்கம் ஏன் 6 சதவிகிதத்திற்கும் அதிகமாகவே இருந்தது? என்பதை விளக்கி, ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி கடிதம் எழுதியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.