கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் கன்னடர்களு க்கு 100 சதவீத பணி இடங்களை ஒதுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதா வளர்ச்சியை பாதிக்கும் என தொழில்துறையினர் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். கர்நாடகாவில் மாநில அரசின் குரூப் டி, குரூப் சி பணியிடங்கள் தனியார் வேலைகளில் 100 சதவீதம் வரை இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை மாநில அரசு கொண்டு வந்தது. அம்மசோதாவிற்கு புதன்கிழமையன்று ஒப்புதல் வழங்கப் பட்டு விட்டது. மேலும் யார் கன்னடர்கள் என ஒரு வரையறையும் கொடுத்துள் ளது. இதன்படி தனியார் நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பொறுப்புகளில் 70 சதவீத மும் கன்னடர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற நிலை உருவாகி யுள்ளது. இந்த சட்டம் குழப்பத்தை உருவாக்கு கிறது. உலகளாவிய பொருளாதாரப் போட்டி நிலவி வரும் நிலையில் கன்ன டர்களை மட்டுமே பணியமர்த்தும் போது அது நெருக்கடிகளை உருவாக்கும் என தொழில் துறையினர் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். அத்துடன் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கர்நாடக அரசு இந்த முடிவிலிருந்து பின்வாங்கி உள்ளது.