புதுதில்லி, அக்.8- இந்தியாவில் அதிகரிக்கும் பாலியல் வல்லுறவுக் குற்றங்கள், மத வன்முறை கள், பயங்கரவாத நடவடிக்கைகள் கார ணமாக, அங்கு சுற்றுலா செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தனது நாட்டுக் குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, முடிந்தால் இந்திய சுற்றுப் பயணத்தையே மறுபரிசீலனை செய்வது நல்லது என்றும் தனது மக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. பணி நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா பயணமாகவோ வெளிநாடுகளுக்கு செல் லும் தனது நாட்டுக் குடிமக்களுக்கு, அமெ ரிக்க அரசு அவ்வப்போது பயண ஆலோ சனைகள் வழங்குவது வழக்கமான ஒன் றாகும். அந்த வகையில், அமெரிக்க வெளி யுறவுத்துறை அண்மையில் புதிய பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: “பயங்கரவாதம், அமைதியின்மை கார ணமாக ஜம்மு மற்றும் காஷ்மீர் (கிழக்கு லடாக் மற்றும் லே தவிர) பயணம் செய்ய வேண்டாம். இந்தியாவில் பலாத்கார சம்ப வங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை போன்ற வன் முறைக் குற்றங்கள் சுற்றுலாத் தளங்களி லும் பிற இடங்களிலும் அதிகமாக நடக்கி றது. சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளா கங்கள் மற்றும் அரசு அலுவலர்களைக் குறிவைத்து எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும். கிழக்கு மகாராஷ்டிரா, வடக்கு தெலுங்கானாவில் இருந்து மேற்கு வங்கம் வரை இருக்கும் அமெரிக்கக் குடிமக்க ளுக்கு அவசரக்கால உதவிகளை அதிகம் வழங்க முடியாது. ஏனென்றால் இந்த பகுதி களுக்குச் செல்ல அமெரிக்க அதிகாரிகள் சிறப்பு அனுமதியைப் பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவுறுத்தல், இந்தியாவின் தற்போதைய நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும், சர்வ தேச அளவில் இந்தியாவின் மதிப்பைக் குறைக்கும் வகையிலும் இருப்பதால், அமெ ரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை, நரேந்திர மோடி அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.