கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மொத் தமுள்ள 224 தொகுதிகளில் 136 தொகுதிகளில் அபார வெற்றி பெற்ற காங் கிரஸ் கட்சி, தென்னிந்தியாவிலிருந்து பாஜ கவை துரத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கர்நாடக வெற்றியை ஒட்டுமொத்த நாடே கொண்டாடி வரும் நிலையில், அரசியல் சாராத கிரிக்கெட் உலகிலும் கர்நாடக சட்ட மன்ற தேர்தல் கொண்டாட்டம் அரங்கேறி யுள்ளது. ஐபிஎல் அணியான பெங்களூரு (ஆர்சிபி) ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் அணி யின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் (பெங்களூரு மூத்த வீரர்) ரசிகர்கள் கர்நாடக சட்டமன்ற தேர்தல் வெற்றியை பிரம்மாண்ட மாக கொண்டாடியுள்ளனர்.
எல்லாவற்றிற்கும் காரணம் பாஜக எம்பி கம்பீர்தான்
கிரிக்கெட்டில் தேர்தல் கொண்டாட்டமா? என எழும் பலத்த சந்தேகத்திற்கு காரணம் பாஜக எம்பியும், இந்திய அணியின் முன் னாள் வீரரும், ஐபிஎல் தொடரின் லக்னோ அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர்தான். “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக” என்ற பழமொழிக்கு ஏற்ப 10 ஆண்டுகால நிகழ்விற்காக பழிதீர்க்கப் போகிறேன் என்ற பெயரில், கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூரு மைதான த்தில் அந்த அணிக்கெதிரான ஆட்டத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு ரசிகர்களை நோக்கி “வாயை மூடுங்கள்” என வம்புக்கு இழுத் தார் கம்பீர். கம்பீரின் செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மே 1 அன்று நடைபெற்ற ஆட்டத்தின் போது, வெற்றி யை கோலி மிகுந்த ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கம்பீர் மீண்டும் தகராறு செய்ய, கோலி பதிலடி கொடுத்து கம்பீரை அலறவைத்தார். இந்த விவகாரம் விளையாட்டு மோத லாக மட்டுமின்றி அரசியல் மோதலாக மாறி யது. கிரிக்கெட் ஆர்வமுடைய அரசியல் சார்பு நபர்கள் “கர்நாடக தேர்தலுக்கு முன்னரே பாஜக தோலுரிக்கப்பட்டு விட்டது” என பல்வேறு மீம்ஸ்களை வெளி யிட, ஒட்டுமொத்த பெங்களூரு (ஆர்சிபி) ரசிகர்கள், கோலியின் ரசிகர்கள் அதே அரசியல் சார்பு கருத்துகளை மீம்ஸாக டிரெண்ட் செய்தனர். “கர்நாடக தேர்த லுக்கு முன்னரே பாஜக தோலுரிக்கப்பட்டு விட்டது” என கூறப்பட்டதற்கு ஒரே காரணம், கம்பீரின் கீழ்த்தரமான செயல்பாடு மற்றும் அவரது எம்பி பதவி மட்டும்தான். தேர்தலுக்கு முன்னரே சமூக வலைத் தளங்களில் பலத்த அடி வாங்கிய கம்பீர் -பாஜக அன் கோ, கர்நாடக தேர்தல் முடி வுக்கு பிறகு மிக மோசமாக அளவில், அதாவது எண்ணெய் இல்லாமல் நெட்டிசன் களால் வறுத்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
முதல் முறை
கிரிக்கெட் வீரர்கள் அரசியலுக்கு செல்வது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். ஆனால், கிரிக்கெட் விளையாட்டிற் குள் அரசியல் சார்பு பிரச்சாரம், வெற்றி கொண்டாட்டம் என்ற நிகழ்வு இதுவே முதல் முறையாகும். இந்த புதிய நிகழ்வுக்கு பாஜகவின் கீழ்த்தரமான அரசியல், ஒரு ஐபிஎல் அணியை வழிநடத்தும் பாஜக எம்பியின் (கம்பீர்) மோசமான செயல்பாடு தான் காரணம். இதில் சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால் கர்நாடக இளை ஞர்கள், பாஜகவின் அரசியல் தன்மையை புரிந்துகொண்டதுதான்.