விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் ஓய்வூதியம், மாநில அரசுகளின் வாயிலாக அளித்திட, ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. வியாழன் அன்று மாநிலங்களவை யில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத் தில் டாக்டர் வி.சிவதாசன் பேசியதாவது: நாட்டில் விவசாயத் தொழிலாளர் களும், கிராமப்புறத்தில் வாழும் தொழி லாளர்களும் சமூகத்தில் மிகவும் மோச மான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். மிக அற்ப அளவிலான ஊதியம், சமூகப் பாதுகாப்பின்மை, முறையாக உடல் நலத்தைப் பேண முடியாத நிலை, ஊட்டச்சத்தின்மை மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு போதிய அளவிற்குக் கல்வி வாய்ப்புகளை அளிக்க முடியாத நிலை எனப் பல்வேறு பிரச்சனைகளுடன் அவர்கள் உழன்று வருகிறார்கள். இலவச சுகாதாரப் பாதுகாப்பு வயதான காலத்தில் எவ்வித வேலை யும் செய்யமுடியாத நிலைக்கு ஆளான விவசாயத் தொழிலாளர்கள் அரசாங்கத் திடமிருந்து எவ்விதமான ஆதரவையும் பெற முடியாது தத்தளித்துக் கொண்டி ருக்கிறார்கள். வயது முதிர்ந்த ஒவ்வொரு விவ சாயத் தொழிலாளிக்கும் மாதந்தோறும் குறைந்தபட்சம் 5,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டியது அவசியமாகும். இந்தத் தொகையை ஒன்றிய அர சாங்கம், மாநில அரசாங்கங்கள் மூல மாக அவர்களுக்கு வழங்கிட வேண்டும். விவசாயத் தொழிலாளர்கள் அனை வருக்கும் இலவசமாக சுகாதார பாது காப்புக்கும் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். அதிகரிக்கும் தற்கொலைகள் தேசியக் குற்றப் பதிவேடு நிலையத் தின் தரவுகளின்படி, விவசாய நெருக் கடியின் விளைவாக விவசாயத் தொழி லாளர்கள் மத்தியில் தற்கொலைகளும் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது. 2021இல் 5,563 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், இந்த எண்ணிக் கை 2022இல் 6,083ஆக அதிகரித் திருப்பதாகவும் அந்த அறிக்கை காட்டுகிறது. எனவே இவ்வாறுள்ள விவ சாயத் தொழிலாளர்களின் நிலையை மாற்றிட உரிய நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் வி. சிவதாசன் பேசினார். (ந.நி.)