states

துண்டறிக்கை, பதாகைக்கும் தடை

புதுதில்லி, ஜூலை 16 - பிரதமர் நரேந்திர மோடி மற்றும்  பாஜக அரசை விமர்சிக்க எதிர்க்கட்சி கள் பயன்படுத்தி வந்த 40 வார்த்தை களுக்குத் தடை விதித்து மக்கள வைச் செயலகம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், தர்ணா,  உண்ணாவிரதம் போன்ற போராட் டங்களை நடத்துவதற்கு தடை விதிக்  கப்பட்டது.  தற்போது நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் துண்டுப் பிர சுரங்களை வழங்குவது, பதாகை களைத் தூக்கிப் பிடிப்பது ஆகிய வற்றுக்கும் தடை விதித்து மோடி அரசு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்களன்று (ஜூலை 18) தொடங்கவுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சி கள் திட்டமிட்டு வந்தன. முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு மோடி ஆட்சியில் அதிகரித்து வரும் வேலை யின்மை, விலைவாசி, ஜிஎஸ்டி என்ற  பெயரில் நாளும் ஏற்றப்படும் வரிச் சுமை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் போன் றவர்களின் வெறுப்புப் பேச்சு, பாஜக ஆளும் மாநிலங்களில் இஸ் லாமியர்களின் வீடுகள் குறிவைத்து இடிக்கப்படுவது ஆகிய விவகாரங் களை நாடாளுமன்றக் கூட்டத்தொட ரில் கிளப்புவது தொடர்பாக எதிர்க் கட்சிகள் ஆலோசனை நடத்தி வந் தன.

இதனால் மழைக்காலக் கூட்டத் தொடர் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்பட்டது. மோடி அரசும் இந்த நெருக்கடியை உணர்ந்தது. எனவே, இந்த விவகாரங்களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்று  அச்சப்பட்ட மோடி அரசு, எதிர்க்கட்சி களின் செயல்பாட்டை முடக்கும் வகையிலான உத்தரவுகளைப் பிறப்  பித்து வருகிறது. முதலாவதாக, மக்களவையி லும், மாநிலங்களவையிலும் ‘பயன் படுத்தக்கூடாத வார்த்தைகள்’ அடங்கிய புதிய கையேடு ஒன்றை  மக்களவைச் செயலகம் அவசர அவ சரமாக வெளியிட்டது. பிரதமர் நரேந் திர மோடி அரசைக் குறிப்பிட்டு, எதிர்க்  கட்சிகள் விமர்சிக்கும் இந்தி, ஆங்கில மொழிகளாலான வார்த்தைகளுக்கு எல்லாம் மோடி அரசு தடை விதித்தது. ஊழல், மோசடி, பொய், சர்வாதி காரம், நாடகம், இரட்டை வேடம், வாய்ஜாலம், வெட்கக்கேடு, துரோ கம், கண்ணீர், துதிபாடி, சர்வாதி காரி, இரட்டை வேடப் பேர்வழி, சிறு பிள்ளைத் தனமானவர், சகுனி, நாச சக்தி, ரத்தம் குடிப்பவர், நாடக காரர், பெருமை பீற்றுபவர், கிரி மினல், ரவுடித்தனம், லாலிபாப், பாப்  கட், ஒட்டுகேட்பு, வாய்ஜாலம் காட்டு பவர் (ஜூம்லாஜீவி), கொரோனா பரப்புபவர், கண்துடைப்பு, கழுதை, முதலைக் கண்ணீர், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள், அராஜகம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அந்த வார்த்தை கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்  படும் என்று அறிவித்தது.

இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த  நிலையில், நாடாளுமன்ற வளாகத்  தில் ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணா விரதம் போன்ற போராட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து அடுத்த தாக்குதலைத் தொடுத்தது. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் நிலை பாட்டை வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக வழிமுறையாக நாடாளு மன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை  முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது காலம் காலமாக உள்ள நடைமுறை.  அதற்கு மோடி அரசு தடை விதித்தது. இதற்கு இடையிலேயே தற் போது, சபாநாயகர் அனுமதியின்றி அவைக்குள் பதாகைகள், துண்டுப்  பிரசுரங்கள், பத்திரிகைக் குறிப்புகள் போன்றவற்றை கொண்டு வருவதற்கும் மோடி அரசு தடை விதித்துள்ளது. கடந்த கூட்டத்தொடரில் மாநிலங்க ளவையில் எதிர்க்கட்சியினர் கடும்  அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளை கிழித்தெறிந்து தர்ணாவிலும் அவை  உறுப்பினர்கள் ஈடுபட்டனர். எனவே  இதனை கருத்தில் கொண்டே இந்த  புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள தாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரி வித்துள்ளன

தமிழ்நாடு எஸ்சி-எஸ்டி பட்டியலில் திருத்தம் வருகிறது?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் வனப் பாது காப்புத் திருத்த மசோதா, தேசிய பல்  மருத்துவ ஆணைய மசோதா, மத்திய  பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா,  ஆள்கடத்தல் (பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா, குடும்ப நீதிமன்றங்கள் திருத்த மசோதா, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய பாஜக அரசு  பட்டியலிட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும்  சத்தீஸ்கரில் ஆதி திராவிடா் மற்றும்  பழங்குடியினர் பட்டியலை மாற்றிய மைப்பதற்கான அரசமைப்பு திருத்த மசோதாக்களும் பட்டியலிடப்பட்டு உள்ளன.