இஸ்ரேல் போர்க்கால ‘அமைச்சர்’ ராஜினாமா
டெல்அவிவ், ஜூன் 10- இஸ்ரேலின் நேதன்யாகு அரசாங்கத்தின் போர் அமைச்சரவையில் இருந்து, முன்னாள் ராணுவ தளபதி யும் ராணுவ அமைச்சரு மான பென்னி காண்ட்ஸ் ஜூன் 9 அன்று ராஜினாமா செய்துள்ளார். இவர் ஏற்கனவே, அந்நாட்டின் அமைச்சரவை யை கலைத்து விட்டு ஒரு தேர்தல் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் ஹமாஸ் உடனான போரில் உண்மையான வெற்றியை அடைவதில் இருந்து இஸ் ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தடுப்பதாக ராஜினாமா அறிவிப்புக்கு பின்னதாக நடந்த செய்தி யாளர் சந்திப்பில் தெரி வித்துள்ளார்.
சுற்றுப் பயணத்தை துவங்குகிறார் பிரதமர் மோடி
புதுதில்லி, ஜூன் 10 - 3-வது முறையாக இந்தி யாவின் பிரதமராக பதவி யேற்ற கையோடு, பிரதமர் நரேந்திர மோடி, இத்தா லிக்கு சுற்றுப்பயணம் மேற் கொள்கிறார். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத் தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப் பினர்களாக இருக்கும், ‘ஜி7’ கூட்டமைப்பின் 50-ஆவது உச்சி மாநாடு இத்தாலியின் பசானோ நகரில் ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறு கிறது. இதில் கலந்து கொள் வதற்காக ஒரு நாள் பயண மாக பிரதமர் மோடி இத்தாலி புறப்பட்டுச் செல்கிறார்.
பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து!
புதுதில்லி, ஜூன் 10 - பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெறாத போதும், கூட்டணிக் கட்சி களின் தயவில், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இந்திய பிரதமராக ஞாயி றன்று பதவியேற்றுக்கொண் டார். விழாவில், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள், மொரீஷியஸ் நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங் கேற்றனர். இந்நிலையில், ‘இந்திய பிரதமராக பதவி யேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்’ என பாகிஸ் தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சுருக்கமான வாழ்த்து ஒன்றை ‘எக்ஸ்’ தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
சோனியா - ராகுலைச் சந்தித்த ஷேக் ஹசீனா
புதுதில்லி, ஜூன் 10 - பிரதமர் நரேந்திர மோடி யின் பதவியேற்பு விழா விற்காக இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, திங்களன்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து உரையாடினார். 1971-இல் வங்கதேச விடு தலைக்கு, அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி பெரும் பங்காற்றி னார். அப்போது முதல் இந்தியாவுடன் வங்கதேசம் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது.
நீட் மோசடி: பீகாரில் 13 பேர் கைது!
பாட்னா, ஜூன் 10 - வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது உள்பட, நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பீகாரின் பொருளாதார குற்றப்பிரிவு, “நீட் கேள்வித் தாள் கசிந்த விவகாரத்தில் 4 மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் உள்பட 13 பேரை கைது செய்துள்ளது. பீகார் பொதுப் பணித்துறையில் ஆசிரியர் தேர்வுக் குழுவில் இருந்த ஒருவரும் கைதாகியுள்ளார்.
அமைச்சராக தொடருவேன் குழப்பும் பாஜக எம்பி சுரேஷ் கோபி
18ஆவது மக்களவைக்கான ஒன்றிய அமைச்சரவை ஞாயிறன்று தேர் வான நிலையில், பிரதமர் மோடி யை சேர்த்து 30 கேபினட் அமைச்சர் கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர் கள், 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட னர். இந்நிலையில், ஞாயிறன்று பதவி யேற்பு விழாவின் பொழுதே ஒன்றிய இணை அமைச்சராக பதவியேற்ற நடி கரும், கேரள பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி,ஞாயிறன்று இரவு,”பதவியில் நீடிக்க விரும்பவில்லை, மீண்டும் திரைப் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” எனக் கூறியதாக தகவல் வெளியாகியது. இது பாஜகவினர் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய நிலையில், திங்க ளன்று காலை சுரேஷ் கோபி,”நான் ராஜி னாமா செய்ய போவதாக வெளியான தக வல் தவறானது. நான் அமைச்சராக தொடருவேன்” எனக் கூறினார்.
“ஜெகன் மோகன் மீண்டும் வெல்வார்” ரூ.30 கோடி பந்தயம் கட்டியவர் மர்ம மரணம்
மக்களவை தேர்தலோடு ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்ற தேர் தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி 164 இடங்களை கைப்பற்றிய நிலையில், ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கி ரஸ் கட்சி வெறும் 11 இடங்களை மட்டுமே வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத நிலையை அடைந்துள்ளது. ஜூன் 12 அன்று ஆந்திர முதல்வராக தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு பதவி யேற்க உள்ள நிலையில், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் மீண்டும் வெற்றிபெறுவார் என்று ரூ.30 கோடி பந்தயம் கட்டிய அக்கட்சியின் நிர்வாகி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏலூர் மாவட்டம் தூர்ப்பு திகுபல்லி எனும் கிராமத்தைச் சேர்ந்த வேணு கோபால் ரெட்டி (52) ஒய்எஸ்ஆர் காங்கி ரஸ் கட்சியின் நிர்வாகி, ஜெகன்மோகன் மீண்டும் முதல்வர் ஆவார் என அப்பகுதி யில் உள்ள பலரிடம் ரூ. 30 கோடி வரை பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நாள் அன்று, ஜெகன் கட்சி படுதோல்வி அடைந் ததை அடுத்து வேணுகோபாலிடம் பணம் கட்டியவர்கள் திருப்பிக் கேட்கத் தொடங்கினர். கடும் நெருக்கடிக்கு ஆளான வேணுகோபால் ரெட்டி கிரா மத்தை விட்டு வெளியேறி ஞாயிறன்று ஊர் எல்லைப் பகுதியில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 சீட் வைத்துள்ள எங்களுக்கு இணையமைச்சர் பதவியா? சிவசேனா ஷிண்டே குமுறல்
தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் தேசிய ஜனநாயகக் கூட் டணிக் கட்சிகளின் ஆதரவோடு மூன் றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்தார் மோடி. மோடியைச் சேர்த்து 72 பேர் ஒன்றிய அமைச்சர்களாக பதவி யேற்ற நிலையில், ஒன்றிய அமைச்சர் ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே முட்டல் மோதல் துவங்கியுள்ளது. ஞாயிறன்று,”நான் ஏற்கெனவே கேபினட் பொறுப்பில் இருந்தவன். அத னால் எனக்கு வழங்கப்படும் இணை அமைச்சர் பொறுப்பு வேண்டாம். இது எனக்கு அவமரியாதையை ஏற்படுத்தும்” என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல் கூறினார். இதன்வரிசையில் சிவ சேனாவும் (ஷிண்டே) பாஜகவிற்கு எதி ராக இறங்கியுள்ளது. “ஒன்று, இரண்டு எம்பிகளை வைத்துள்ள கட்சிகளுக்கு கேபினட் பொறுப்பு, 7 எம்பிக்களை கொண்டுள்ள எங்களுக்கு இணைய மைச்சர் பதவியா?” என சிவசேனா (ஷிண்டே) பாஜகவிற்கு கேள்வி எழுப்பி யுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் அலுவல் ஆய்வுக்குழு நாளை கூடுகிறது!
சென்னை, ஜூன் 10- தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12 அன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரை யுடன் தொடங்கியது. பிப்ரவரி 19 அன்று 2024-25ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டும், பிப்ரவரி 20 அன்று வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய் யப்பட்டன. இவற்றின் மீது பிப்ரவரி 22 வரை விவாதம் நடைபெற்றது. எனினும், மக்களவைத் தேர்தல் காரணமாக, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை. தற்போது, மக்களவை தேர்தல் முடிந்து, நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24 அன்று துவங்கும் என்று பேரவைத் தலை வர் மு. அப்பாவு அறிவித்தார். இந்நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் ஜூன் 12 அன்று சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடத்துவது, துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நாட் கள் குறித்து அலுவல் ஆய்வுக்குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
ஆதிதிராவிடர் நலத் துறை பெயர் மாற்ற பரிந்துரை இல்லை
சென்னை, ஜூன் 10- தமிழகத்தில் 76 பட்டியலின வகுப் பைச் சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் நலனுக்காக ஆதிதிராவிடர் நலத்துறை உருவாக்கப்பட்டது. இந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயரை பட்டியல் சாதியினர் நலத்துறை என அறி விக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பட்டியல் இனத்தவர்களுக்கான நலத் துறையின் பெயர் தவறுதலாக ஆதிதிரா விடர் என மொழிபெயர்ப்பு செய்யப்பட் டுள்ளது. ஆதி திராவிடர் என்பது பட்டி யலின வகுப்பில் உள்ள 76 இனங்களில் ஒன்று. அரசு துறைகளின் மொழி பெயர்ப்பு சரியானதாக இருக்க வேண் டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள் ளது என்று அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரை எதுவும் அளிக்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் உத்தரவிட்டனர்.
மோடி அரசுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது
கோயம்புத்தூர், ஜூன் 10- அமைச்சர் முத்துசாமி, கோவையில் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்துள் ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: “முதலமைச்சர் ஸ்டா லின் எடுத்த முயற்சி காரணமாக ‘இந்தியா’ கூட்டணி அருமை யான வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க முடியவில்லை என்றாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மத்தியில் இருக்கும் அரசு தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாமல், அவர்கள் இந்தியா கட்சியின் ஆலோசனையைக் கேட்க வேண்டும் என்ற நிலை உரு வாக்கப்பட்டுள்ளது. தேர்தல் என்று வந்தவுடனே வெளிப்படையாகவே 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என ஸ்டாலின் தெரிவித்தார். வடமாநிலங்க ளில் என்னென்ன பிரச்னை நடைபெறுகிறது என்று அனை வருக்கும் தெரியும். பெருவாரி யான வாக்குகளை நமக்கு மக் கள் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு காரணம் கடந்த மூன்று ஆண்டுகளில் செய்த மக்கள் பணிதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 14 வரை வெப்பம் அதிகரிக்கும்!
சென்னை, ஜூன் 10- “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு கிறது. இதனால் திங்களன்று (ஜூன் 10) மற்றும் செவ்வாயன்று (ஜூன் 11) தமி ழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேநேரம், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஜூன் 10 முதல் 14 வரை ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல்- 3 செல்சியஸ் படிப்படியாக உய ரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி
சென்னை, ஜூன் 10- தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக் கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவா னது, ஜூன் 6-ஆம் தேதியோடு நிறைவு பெற்றது. இந்நிலையில் விண்ணப்ப பதி விற்கு ஜூலை 10, 11 ஆகிய 2 நாட்கள் மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 11 கடைசி நாளாகும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இது வரை விண்ணப்பிக்க தவறிய மாணவர் கள் http://www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து பதிவு கட்டணம் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். இதையடுத்து ஜூன் 12ஆம் தேதி ரேண்டம் எண், ஜூலை 10 ஆம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
ஓட்டுநர் உரிமம் மருத்துவச் சான்று கட்டாயமானது!
சென்னை, ஜூன் 10- தமிழ்நாட்டில் 40 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஓட்டுநர் உரிமம் புதிதாக பெறவும், புதுப்பிக்கவும் மருத்துவச் சான்று கட் டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். அதாவது, ஒன்றிய அரசின் மோட்டார் வாகன விதி எண்.5-இன் படி 40 வய திற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னர் புதிய ஓட்டுநர் உரிமம் பெற முடி யும். அதேபோல், பழைய ஓட்டுநர் உரி மத்தை புதுப்பிக்க முடியும் என்று கூறி யுள்ள சாலைப் பாதுகாப்பு ஆணையர், மாநிலத்தின் ஒரு சில இடங்களில்- தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களி டம் சான்றிதழ்கள் பெறும் நிகழ்வுகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.