states

img

சிபிஎம் ஹரியானா மாநிலச் செயலாளராக பிரேம் சந்த் தேர்வு

சண்டிகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹரியானா மாநில 17ஆவது மாநாடு கடுமையான குளிருக்கு இடையே ஜனவரி 11ஆம் தேதி கைத்தல் நகரில் பொதுக்கூட் டத்துடன் தொடங்கியது. இந்திர ஜித் சிங் தலைமை வகித்தார். இந்த பொதுக் கூட்டத்தில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் நிலோத் பல் பாசு, மத்தியக் குழு உறுப்பி னர்கள் டாக்டர் கே.ஹேமலதா, ஏ.ஆர்.சிந்து, மாநிலச் செயலாளர் சுரீந்திர சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஹரியானா மாநிலச் செயலர் தரியாவ் சிங் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.  வகுப்புவாத மற்றும் சாதியத் தாக்குதல்களுக்கு எதிராகவும், போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம், ஊழியர்களின் ஊதி யத்தை உயர்த்துதல் மற்றும் விவ சாயிகள் இயக்கத்திற்கு ஆதரவாக வும், தீவிர தேர்தல் சீர்திருத்தங்க ளுக்கு ஆதரவாகவும், ஒரே நாடு  ஒரே தேர்தலுக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை அட்டூழியங்க ளுக்கு எதிராகவும், மின்சாரம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர் தனியார் மயமாக்கலுக்கு எதிராக தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டில் 30 பேர் கொண்ட மாநிலக் குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. அதில் 9 பேர் மாநிலச் செயற் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலச் செயலா ளராக பிரேம் சந்த் தேர்வு செய்யப் பட்டார். மேலும் தமிழ்நாட்டின் மதுரை நகரில் ஏப்ரல் மாதம் நடை பெறவுள்ள அகில இந்திய மாநாட் டிற்கான பிரதிநிதிகளும் மாநாட் டில் தேர்வு செய்யப்பட்டனர்.  மேலும் மின்துறை தனியார்மய மாக்கல், புதிய கல்விக் கொள்கை, தொழிலாளர் குறியீடுகள், அதி கரித்து வரும் பணவீக்கம், விவசா யிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றுக்கு எதிராக ஜனவரி 24 முதல் ஜனவரி 31 வரை ஹரியா னா மாநிலம் முழுவதும் பிரச்சார ஆர்ப்பாட்டங்களை நடத்த மாநாட் டில் முடிவு செய்யப்பட்டது. நிலோத்பல் பாசு நிறைவுரையுடன் மாநாடு நிறைவுபெற்றது.