காந்தி நகர், மார்ச் 18 - குஜராத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு ‘பகவத் கீதை’யை ஒரு பாடமாக சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக குஜராத் அரசு சுற்றறிக்கை ஒன்றையும் வெளி யிட்டுள்ளது. அதில், இந்தியாவின் கலாச்சாரம் அறிவாற்றல், பழம்பெருமை ஆகியவற்றை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பகவத் கீதையின் மதிப்புகள், கோட்பாடுகள் மற்றும் முக்கியத்து வம் என்பவை எல்லா மதத்தி னராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. எனவே குஜ ராத்தில் 6-ஆம் வகுப்பில் இருந்து கீதை தொடர்பான பாடங்கள் கற்றுத்தரப்படும். முதலில் பகவத் கீதையின் முக்கி யத்துவம் பற்றி பாடம் எடுக்கப் படும். அதன்பின் அதில் இருக்கும் மந்திரங்கள், பாடல்கள், கட்டுரை கள் கற்பிக்கப்படும். அதை வைத்து தேர்வுகள், போட்டிகள், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு கீதை படிப்பதற்கான ஆர்வம் தூண்டப்படும். இது தொடர்பான அனைத்து உதவிகளும் அரசுத் தரப்பில் வழங்கப்படும். மாண வர்கள் எல்லோருக்கும் இதற்காக பகவத் கீதை வழங்கப்படும். ஆடியோ, வீடியோ மூலமும் பகவத் கீதை கருத்துக்கள் வகுப்பில் எடுக்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் ஜீத்து வாகனி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஹேமங் ராவல் கருத்து ‘முதலில் 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புங்கள்’
குஜராத் அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள் ளது. “இந்த முடிவை வரவேற்கிறோம். ஆனால் கீதையை முதலில் படிக்க வேண்டியது பாஜக-வினர்தான். மேலும் குஜராத் பள்ளிகளின் தரத்தையும் அரசு உயர்த்த வேண்டும். 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும். குஜராத்தில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் அதிகம் உள்ள னர். பல மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்பு வரை எழுதப் படிக்கத் தெரியாது. அவர்களுக்காக அரசு ஏதாவது செய்யும் என்று நம்புகிறேன்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹேமங் ராவல் குறிப்பிட்டுள்ளார்.