புதுதில்லி, டிச. 28 - கேரள முதல்வர் பினராயி விஜயன், திங்களன்று பிரதமர் நரேந்திர மோடி யை தில்லியில் நேரில் சந்தித்தார். பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில், கேரளத்திற்கு கூடுதல் நிதி யுதவி வழங்க வேண்டும்; நீண்டகால மாக நிலுவையில் இருக்கும் கேரள மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளுக்கு ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முதல்வர் பினராயி விஜயன் வலி யுறுத்தியதாக செய்திகள்தெரிவித்தன. மேலும், கேரளத்தில் வனப் பகுதி யை ஒட்டிய பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் விவகாரத்தில், ஒன்றிய அரசு கேரள அரசின் நிலைபாட்டிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியை பினராயி விஜயன் கேட்டுக் கொண்ட தாக தெரிகிறது. கேரளத்தில் வனத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை யிலான பகுதிகளை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதி களில் குடியிருப்புகளோ தொழிற்சாலைகளோ இருக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த உத்தரவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது நடைமுறைப்படுத்த முடியாத தீர்ப்பு என ஏற்கெனவே கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரளாவில் வனத்தை ஒட்டிய பகுதிகள் பலவற்றில் மக்கள் வாழ்ந்து வருவதாகவும், நீதி மன்ற உத்தரவை அமல்படுத்தினால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், வனத்தை ஒட்டிய பகுதிகளில் மிகப் பெரிய எண்ணிக்கையில் மக்கள் வாழ்ந்து வருவதால் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது அரசுக்கு இய லாத காரியம் என்றும் தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக, கேரள அரசு, உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந் துள்ளது. இந்த வழக்கு தற்போது விசார ணையில் உள்ளது. இந்நிலையில்தான், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பினராயி விஜயன், இந்த விஷயத்தில் கேரள அரசுக்கு ஒன்றிய அரசு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. மேலும், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான அதி வேக ரயில் பாதை திட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரை அனுமதி வழங்காமல் உள்ள நிலையில், விரைந்து அனுமதி வழங்க வேண்டும், கொரோனா கால செலவினங்களால் மாநில அரசு களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்; மாநிலத்திற்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பின ராயி விஜயன் கோரிக்கை விடுத்த தாகவும் செய்திகள் தெரிவித்தன.