states

மணிப்பூர்: அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

புதுதில்லி, ஜூன் 26- மணிப்பூர் நிலைமை குறித்து, அமைச்சரவை சகாக்களுடன் பிர தமர் நரேந்திர மோடி, திங்களன்று ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா மற்றும் எகிப்தில் 6 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திங்களன்று அதிகாலை  தில்லி வந்தடைந்தார். அவரை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் வெளியுறவுத்துறை இணை  அமைச்சர் மீனாட்சி லேகி ஆகியோர்  வரவேற்றனர். இந்நிலையில், காலையில் தில்லியில் உள்ள தமது இல்லத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சரவை குழுவு டன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோ சனை நடத்தினார். இனக் கலவரம்  நடந்துவரும் மணிப்பூர் மாநிலத்தின்  தற்போதைய நிலைமை குறித்த விவ ரங்களைக் கேட்டறிந்தார்.  கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 24), அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடை பெற்றது. இதில், மணிப்பூர் முதல்வர்  பைரேன் சிங்கை பதவியிலிருந்து நீக்க வேண்டும்; அனைத்துக் கட்சி  பிரதிநிதிகளின் குழுவை மணிப்பூ ருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக் கைகள் குறித்து, உள்துறை அமைச்  சர் அமித்ஷா, பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார். மேலும், இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள் ளாத மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங், பின்னர் தன்னைத் தனியாக சந்தித்து பேசியவற்றையும், நிலை மை முன்னேறி வருவதாக அவர் கூறிய தகவலையும் பிரதமர் மோடி யிடம், அமித்ஷா பகிர்ந்து கொண் டார். ‘’அமித்ஷாவின் நேரடிப் பார்வை மற்றும் மாநில - ஒன்றிய  அரசுகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக, கடந்த வாரத்தில் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை  பெரிய அளவில் கட்டுப்படுத்தப் பட்டு உள்ளது’’ என்று டுவிட்டர் பக்  கத்தில் பதிவிட்டிருந்த பைரேன் சிங்,  “குக்கி சமூகத்தை அணுகி பேசு வேன்”என்று கூறியிருந்தார். இந்த  தகவல்களையும் பிரதமர் மோடியி டம் அமித்ஷா தெரிவித்தார். பிரதமர் மோடியை வரவேற்க, ஜே.பி. நட்டாவுடன், ஹர்ஷ் வர்தன்,  ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ், கவுதம் காம்பீர்  ஆகிய எம்.பி.க்களும் சென்றிருந்த னர் என்பது குறிப்பிடத்தக்கது.

9 ஆண்டு ஆட்சியால் மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களாம்: மோடியிடம் ஜே.பி. நட்டா தகவல்

முன்னதாக, தில்லி விமான நிலையத்தில் தன்னை வரவேற்க வந்த  பாஜக தலைவர் நட்டாவிடம், ‘’இங்கே (இந்தியா) என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று மோடி விசாரித்ததாக கூறப்படுகிறது.  அப்போது, “கடந்த 9 ஆண்டுகளில் நம் அரசு செய்த சாதனை களை மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறோம்; நாடு சந்தோச மாக இருக்கிறது” என நட்டா கூறியதாக, பாஜக எம்.பி. மனோஜ் திவாரி  தெரிவித்துள்ளார். ‘பிரதமர் தங்களிடம் என்ன கேட்டார்’ என்று பத்திரி கையாளர்கள் கேட்ட கேள்விக்குத்தான், மனோஜ் திவாரி இவ்வாறு  பதில் அளித்துள்ளார்.